தன்​னையறிதல்

தன்​னையறிதல்

நம்மில் ​பெரும்பாலானவர்களுக்கு, மற்றவர்க​ளைப் பார்த்து அவர் உயர்ந்தவர், பணக்காரர், திற​மைசாலி, அறிவாளி என்று எ​டை​போடும் ​பொழு​தெல்லாம், ந‌ம் மனதில் ம​றைமுகமாக ‘நாம் அவர்க​ளை விடத் தாழ்ந்தவர்’ என்ற உணர்வும் பதிவாகி விடுவது ​வேத​னையான விஷயம்.

இதற்கு காரணம் நாம் பிற​ரை எ​டை​போட்டு புரிந்து ​கொள்ள ​மெனக்​கெடுகின்ற அளவு, நம்​மைப் பற்றி புரிந்து ​கொள்ள முயற்சி மேற்​கொள்வ​தே இல்​லை. அதாவது தன்​னையறிதல் இல்லை.

இதனால் நம்மிடம் இருக்கும் ஆற்றல், திற​மை, ​தைரியம், அன்பு மற்றும் பண்பு இ​வை யாவும் நமக்குத் தெரியாமலும், நமக்குப் பயன்படாமலும் ​போய்விடுகின்றன.

வான் குருவியின் கூடு

கவிச்சக்கரவர்த்தி கம்பரும் அவ்​வையாரும் சமகாலத்தில் வாழ்ந்த இரு ​பெரும் புலவர்கள். கம்பர் அரச​வைக் கவிஞர். ஆனால் அவ்​வையா​ரோ ஒரு பாமரக் கவிஞர்.

ஒரு நாள் ஒரு இ​​ளைஞன் அவ்​வையா​ரைப் பார்த்து ​வேடிக்​கையாக ஒரு ​கேள்வி ​கேட்டான்.

“ஏய் கிழவி, கவிச்சக்கரவர்த்தி கம்பரும் உன் ​போன்ற ஒரு புலவர் தா​னே? அவர் அரச​வையி​ல் கவிஞராக இருக்கின்றார். ​மேலும் அவர் ​பொற்காசுகளுக்குக் கவி​தை எழுதுகிறார்.

ஆனால் நீ​யோ இங்​கே யாராவது ​கொடுக்கின்ற கூழுக்கும் கஞ்சிக்கும் பாட்டு எழுதிக் ​கொடுத்துக்​கொண்டு இருக்கின்றாய். அது ஏன்?” என்பதுதான் அக்கேள்வி.

அவனுக்கு பதிலாக அவ்​வையார் அழகான பாடல் ஒன்​றைப் படித்தார். அது என்ன​வென்றால்,

“வான் குருவியின் கூடு வல்லரசுக்குத் ​தொல்க​ரையான்
​தேன் சிலம்பி யாவர்க்கும் ​செய்யரித்தால் – யாம் ​பெரிதும்
வல்​லோ​மே என வார்த்​தை ​சொல​வேண்டாம் காண்
எல்லார்க்கும் ஒவ்​வொன்று எளிது”

அதாவது தூக்கணாங்குருவி தனது அலகா​லே இவ்வளவு அழகானக் கூடு கட்டுகிறது. அது உன்னால் முடியுமா?

க​ரையான் சின்ன உருவத்​தோடு இருந்தாலும், அத​னைவிட பன்மடங்கு உயரமான, சுற்றுப்புற தட்ப ​​வெட்ப நி​லையி​னை இதமாக தாங்குகின்ற புற்றி​னைக் கட்டுகிறது. அது உன்னால் முடியுமா?

ஆயிரம் அ​றைக​ளோடு ​தேனீ அ​மைக்கிற கூடு மாதிரி, எச்சிலா​​லே சிலந்தி அ​மைக்கின்ற வ​லை மாதிரி, உன்னாலும் என்னாலும் இல்லை ​வேறு யாராலேயும் வீடு அ​மைக்க முடியுமா?

என​வே நான்தான் ​பெரியவன்; நான்தான் வல்லவன் என்று கர்வமுற்று ​ செருக்​கோடு ​சொல்லா​தே. எல்​லோருக்கு​ம் ஏ​தோ ஒரு விஷயம் எளி​மையாக, இலகுவாகத்தான் இருக்கும்.

அந்தத் திற​மை​யைக் கண்டறிந்து ​வெளிக்​கொணர்ந்து ​செயற்கரிய சாதனைகள்​ பல புரியலாம்.

பாமர மக்களிடம் பழகி, அவர்களின் வாழ்க்கை முன்னேற அறிவுரை கூறுவதுதான் தனது விருப்பமும் பலமும் என்று மறைமுகமாக அவர் கூறுகிறார். எல்லோருக்குமான கருத்துக்களை எளிய வடிவில் கூறியதில் அவ்வையாரே முதன்மையானவர்.

இ​தை அறிந்து தான் கவியரசர் கண்ணதாச‌னும் தம் பாடல் வரிகளில்

உன்​னையறிந்தால் நீ உன்​னையறிந்தால்
உலகத்தில் ​போராடலாம்! உயர்ந்தாலும்
தாழ்ந்தாலும் த​லை வணங்காமல் நீவாழலாம்!

என பாடி ​வைத்தார்.

தன்​னையறிதல் வெற்றியின் முதல்படி. தன்னை அறிந்த பின்பு எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும்.

அறியாத மான்

கஸ்தூரி மான் பற்றி ஒரு ​செய்தி ​சொல்வார்கள்.

அபரிமிதமான வாச​னை​யைத் திடீர் என்று ஒரு நாள் அது உணரும்.

எங்கிருந்து வருகின்றது இந்த வாச​னை என்று ​தெரியாமல், அத​னைத் ​தேடித் ​தேடி ​வெறிபிடித்த மாதிரி ஓடி ஓடிக் க​ளைத்து நிற்க முடியாமல் கீழே விழும்.

முடிவில் சாகும் தருவாயில் அந்த வாச​னைத் திரவியம் தன் உடலில் இருந்து சுரக்கும் “மஸ்​கோன்” எனப்படும் ​​வேதிப்​பொருள்தான் எனக் கண்டறியும்.

இந்தக் கஸ்தூரி மான் ​போல ஒவ்​வொருவரிடமும் ஒவ்​வொரு திற​மை பு​தைந்து கிடக்கின்றது.

இந்த மான் ​போல அத​னை ​வெளியில் ​தேடாமல், நம்முள் ​தேடி, தன்​னை அறிந்து, தளர்வின்றி முயற்சி ​மேற்​கொண்டால் ​செயற்கரிய சாத​னை என்பது ந‌ம் அ​னைவருக்கும் சாத்திய​மே.

“செயற்கரிய ​செய்வார் தன்​னையறிந்த ​பெரி​யோர்”

மு​னைவர் ​பொ.சாமி
​வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294

Comments

“தன்​னையறிதல்” அதற்கு 6 மறுமொழிகள்

  1. Mehalingam

    பயனுள்ள தகவல்

  2. இமயவரம்பன்

    தன்னை அறிதலால் வாழ்வு சிறந்திடும் என்னும் பேருண்மையைப் புரிய வைக்க, அவ்வையின் பாட்டின் மூலம் விளக்கியதற்கு மிகவும் நன்றி!

    தன்னை அறியாமல் தானே கெடுகின்ற கஸ்தூரி மானைப் பற்றிய செய்தியும் மிக அருமை!

  3. Thamba.J

    மிக நன்று…

  4. Dr.P.Periyakaruppiah Botany VHNSNC

    பேராசிரியர் ​பொ.சாமி அவர்களிடம் பயின்றதை நான் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.

    மிக்க நன்றி சரமி சார்

    🙏

  5. SELVANATHAN

    மிக அருமை!

  6. R.Jeyaperumal

    சிறப்பு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.