விழித்துக் கொள்! பிழைத்துக் கொள்! – சுகன்யா முத்துசாமி

விந்தைமிகு தாய் மொழியில் – நாம்
சிந்தை மிகு எழுச்சி கண்டோம்!

நிந்தை மிகு அயல் நாட்டவரால் – நாம்
சந்தை மிகு காட்சி பொருளானோம்!

தந்தை வழி சமூகம் கண்டு
தாய் வழி இன்பம் கொண்டோம்!

எந்தை வழி நான் வந்தேன் – என்
நிலமும் என் விளைச்சலும் அங்கே!

சத்தில்லா வித்துண்டோ முன்னோர் வாழ்வில்?
கத்திச் சொல்வோம்!

என் வம்சம் எங்களுக்கே! – உன்
வம்சம் எதற்கு இங்கே? – சிந்திப்பீர்!!

வித்தில்லா விளைச்சலும்
சத்தில்லா மகவும் வேண்டுமோ தமிழ் இனத்திற்கு?

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி

சுகன்யா முத்துசாமி அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.