நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய் என்ற பாடல் கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பத்தாவது பாசுரம் ஆகும்.
மார்கழி நோன்பினை நோற்பதால் நாராயணனின் அருளால் வீடுபேறு கிடைக்கும்.
அப்படிப்பட்ட பாக்கியம் பெற்ற பெண்ணே, உன்னுடைய நீண்ட உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து கதவைத் திறப்பாயாக என்று எழுப்புவதாக அமைந்த பாசுரம் இது.