அன்று வியாழக்கிழமை.
அப்பா விதித்த நாலுநாள் கெடு முடிந்து இந்து கல்லூரி சென்றாகி விட்டது. அவள் வீட்டிலிருந்த அந்த நாலு நாட்களும் மற்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.ரத்தினவேலும் சுந்தரியும் மனக்கலக்கத்தை
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
செண்பகத்தாம்மாவுக்கு கதிரேசன் வீட்டில் நடந்த விபரங்கள் சொல்லப்படாததால் அவர் சாதாரணமாகவே இருந்தார்.
ஆனாலும் மகன் இந்துவை நாலுநாள் காலேஜுக்கு அனுப்பாததன் காரணம்
புரியாமல் மண்டைக் குடைச்சலோடு இருந்தார்.