நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 17

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்-17

அன்று வியாழக்கிழமை.

அப்பா விதித்த நாலுநாள் கெடு முடிந்து இந்து கல்லூரி சென்றாகி விட்டது. அவள் வீட்டிலிருந்த அந்த நாலு நாட்களும் மற்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.ரத்தினவேலும் சுந்தரியும் மனக்கலக்கத்தை
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

செண்பகத்தாம்மாவுக்கு கதிரேசன் வீட்டில் நடந்த விபரங்கள் சொல்லப்படாததால் அவர் சாதாரணமாகவே இருந்தார்.

ஆனாலும் மகன் இந்துவை நாலுநாள் காலேஜுக்கு அனுப்பாததன் காரணம்
புரியாமல் மண்டைக் குடைச்சலோடு இருந்தார்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 17”

அனுபவம் – கதை

அந்த தனியார் நிறுவனத்தில், நேர்காணலுக்கு வந்து சேர்ந்தான் மணிகண்டன்.

“வணக்கம் மேடம். இங்க எச்.ஆர் சுகன்யா மேடம் யாரு?” மணிகண்டன் கேட்டான்.

“நான் தான் சுகன்யா. என்ன விஷயம்? சொல்லுங்க!” சுகன்யா அவன் கண்களை பார்த்துக் கேட்டாள்.

Continue reading “அனுபவம் – கதை”

காற்றில் அலையும் காதல்!

காற்றில் அலையும் காதல்

முத்து மேஜருக்கு வயது 58. இன்னும் இரண்டு வருடத்தில் ரிட்டயர்மென்ட்.

முத்து மேஜர் கிடையாது. பட்டாளத்தில் சாதாரண சிப்பாய்தான். அந்த காலத்தில் எதுவும் பெரிதாய் படிக்கவில்லை, துறை ரீதியான தேர்வும் எழுதவில்லை என்பதால் சிப்பாயாகவே காலம் தள்ளி விட்டார்.

ஆனால் 35 வருட அனுபவம். எத்தனையோ குண்டு வெடிப்புகள், தீவிரவாதிகளுடன் மோதல் என்று முத்து பார்க்காத பிரளயம் இல்லை; உடல் முழுவதும் ஏகப்பட்ட தழும்புகள்.

முத்து துப்பாக்கி சுடுவதில் வல்லவர். கிலோ கணக்கில் பதக்கங்களை வைத்திருப்பவர் அதனால் வரை எல்லோரும் ‘மேஜர்’ என்று அழைக்கிறார்கள். அதிகாரிகளுக்கும் வர் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு.

Continue reading “காற்றில் அலையும் காதல்!”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 16

நாற்காலியொன்றில் அமர்ந்துகொண்டு கால்கள் இரண்டையும் எதிரிலிருந்த மேஜைமீது போட்டுக் கொண்டு உதடுகளில் சிகரெட்டொன்றைப் பற்ற வைத்து வளையம் வளையமாக புகையை வெளியேற்றிக் கொண்டும் சமயத்தில் புகையை விழுங்கி மூக்கால் வெளியேற்றிக் கொண்டும் படுஜாலியாக அமர்ந்திருந்த தனசேகரன் தோற்றத்தில் முற்றிலும் மாறிப் போயிருந்தான்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 16”

பாடம் – கதை

“சினேகா! நீ மூணு மாசமா வீட்டு வாடகை கொடுக்கல. நீ வாடகை கொடுக்க முடியாதுனா வீட்டை காலி பண்ணு!” வீட்டு உரிமையாளர் சினேகாவிடம் சொன்னபோது அவள் முகம் அஷ்ட கோணலாகியது.

Continue reading “பாடம் – கதை”