தாய்மை – சிறுகதை

தாய்மை

“என்ன நித்யா முகம் வாடியிருக்கு?”. நளினி இப்படிக் கேட்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் யாவும் கண்களில் கண்ணீராய் முட்டிக் கொண்டு நிற்க, நித்யாவின் பார்வை மங்கலாயிற்று.

நளினியால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. வனிதா வார்த்தை அம்புகளை எய்திருப்பாள். முழு விவரமறிய மீண்டும் கேட்டாள்.

“வனிதா ஏதாவது சொன்னாளா?”

“அவ கிடக்கிறா. மனதைப் போட்டுக் குழப்பிக்காதே.”

Continue reading “தாய்மை – சிறுகதை”

இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

இனிக்கும் புளியம்பழம்

 நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். 

அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
    
அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது. 

Continue reading “இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை”

மாவுக்கட்டு – சிறுகதை

மாவுக்கட்டு

சண்முகத்திற்கு வரன் பார்த்த எண்ணிக்கை, பெண் பார்க்கும் படலம் எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்குப் போய் விட்டது.

காரணம் அவனுடைய கரடுமுரடான தோற்றம், முன் வழுக்கை, வீரப்பன் மீசை, சிவந்த கண்கள் இவையெல்லாம் அந்த பெண்களுக்கும், அவன் செய்யும் மத்திய போலீஸ் வேலை அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கும் பிடிக்கவில்லை.

Continue reading “மாவுக்கட்டு – சிறுகதை”

சிறைப்பறவை – சிறுகதை

சிறைப்பறவை – சிறுகதை

“ஏய், மீனாட்சி, இந்தா இதைச் சாப்பிடு” என்றபடி மிளகாய்ப் பழத்தை மீனாட்சி கிளியிடம் நீட்டினான்.

மிளகாய்ப் பழத்தை லவகமாய் வாயில் வாங்கிக் கொண்டு வருணின் இடதுகையில் அமர்ந்தது மீனாட்சி.

Continue reading “சிறைப்பறவை – சிறுகதை”

எங்கள் வீடு – சிறுகதை

வீடு

எங்கள் வீடு, எங்கள் குடும்பத்தின் முக்கிய அடையாளம். ‘காரை வீட்டுக்காரங்க’ என்றே எங்களை ஊரில் அழைப்பர்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே, எங்கள் முன்னோர்கள் வீட்டின் கூரையை காரை மற்றும் தேக்கங்கட்டையால் கட்டியுள்ளனர்.

பூவானி கிராமத்தில் எங்கள் குடும்பம் ஓரளவு வசதி படைத்தது. அப்பா பக்கத்து டவுனில் ஷாப் கடை வைத்திருந்தார். சோப், பேஸ்ட், ஹார்லிக்ஸ், பூஸ்ட் என பல்வேறு பொருட்களுக்கான மாவட்ட ஏஜென்ஸி அப்பாவின் வசம் இருந்தது.

Continue reading “எங்கள் வீடு – சிறுகதை”