காளான் குழம்பு – சிறுகதை

சுவையான காளான் குழம்பு

காளான் குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.

என்னுடைய மகள் பிள்ளை பேத்திக்கு காளான் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.

“ஆச்சி நீங்க வைக்கும் காளான் குழம்பின் ருசியே தனி. இன்னைக்கு மதியம் குழம்பு காளான்தான்.” என்று என்னைக் கட்டியணைத்து கெஞ்சினாள்.

“உனக்கு செய்து தராம வேறு யாருக்கு செஞ்சுதரப் போறேன் என் கன்னுக்குட்டி.” என்றபடி அவளின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளிக் கொஞ்சி காளான் குழம்பினை தயார் செய்து கொண்டிருந்தேன்.

காளான் குழம்பின் செய்முறை என்னுடைய தாய்வழி பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.

என்னுடைய பாட்டி கைதேர்ந்த சமையலரசி. எந்த உணவினைத் தயார் செய்தாலும் எளிமையான மூலப்பொருட்களையே உபயோகிப்பார். அவரின் சமையலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை.

Continue reading “காளான் குழம்பு – சிறுகதை”

அன்பினைப் பொழிந்திடில் – கவிதை

காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே

ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ

Continue reading “அன்பினைப் பொழிந்திடில் – கவிதை”

பேராசைப் போர் – கவிதை

வருத்தம் கொண்டது கொரோனா
தனக்கே போட்டியாக வந்த
ரஷ்யப் படையால்

ஓட ஆரம்பித்தது கொரோனா
தன்னைவிடச் சிறந்த
வஞ்சகப் படையால்

மு.செந்தாமரைச் செல்வி