சைக்கிள் – சிறுகதை

சைக்கிள் - சிறுகதை

‘சைக்கிள் வாங்குவது’ என்பது அருணகிரியின் குழந்தைகள் ஒவ்வொருத்தருடைய பல வருட‌ கனவு.

ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் எல்லோரும் படித்தார்கள்.

முதலாவதாக அந்த பள்ளியில் போய் சேர்ந்தது மூத்த மகன்  இசக்கி. அடுத்து இரண்டு ஆண்டுகள் சென்று இரண்டாவது மகன் வேலன்.

இவ்வாறு இரண்டு இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் பிள்ளைகள் ஒவ்வொருத்தரும் போய் அந்த பள்ளியில் சேர்ந்தார்கள். கடைசியாக கடைக்குட்டி கல்யாணியும் வந்து சேர்ந்தாள். 

Continue reading “சைக்கிள் – சிறுகதை”

தனிமை தண்டனை அன்று – கவிதை

ஒளியும் நீங்கினால் நிழலும் துணையில்லை
விழியும் நீங்கினால் வழியும் நிலையில்லை

பாதையின் படிமம் பாதத்தை நீங்கிடும்
கீதையில் படிந்த கீர்த்தனை விளங்கிடும்

Continue reading “தனிமை தண்டனை அன்று – கவிதை”

விருப்பம் – கவிதை

நீ என்பதில் நானும் இருக்கிறேன் 
அதனால் தான் என் விருப்பத்தைச் சொல்கிறேன்

எனக்கான பாதையில் பயணிக்கிறேன்
அங்கிருந்து தான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்

தெரிந்தோ தெரியாமலோ
நான் அங்கேயே நிற்கிறேன்

Continue reading “விருப்பம் – கவிதை”

யாருக்கும் வெட்கமில்லை – சிறுகதை

யாருக்கும் வெட்கமில்லை

“கங்கிராட்ஸ் மிஸ்டர் ரவி! உங்க மனைவி கன்சீவாயிருக்காங்க!” – லேடி டாக்டர் சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷக் கடலில் மூழ்கிய ரவி, டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்ததும் மீனா கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.

தலையில் இடி விழுதாற்போல் ஓர் உணர்வு. பதற்றத்துடன் “என்ன மீனா, என்ன சொல்றே?” எனக் கேட்டான்.

“நிஜமாத்தாங்க சொல்றேன். இப்போ இது தேவையா? கல்யாணமாகி முழுசா மூணு மாசங்கூட ஆகலே. எனக்கு வெட்கமா இருக்கு. கொஞ்சநாள் போனா ஆபிசுல எல்லோரும் கேலியாப் பேசுவாங்க. அதனால்தான் சொல்றேன்” என்றாள் மீனா.

Continue reading “யாருக்கும் வெட்கமில்லை – சிறுகதை”

மௌனம் – கவிதை

மௌனம் தான் மாற்றத்திற்கான மாற்று வழி

கடலின் மௌனம் புயலில் தெரியும்

காற்றின் மௌனம் சூறாவளியாக மாறும்

காடுகளின் மௌனம் காட்டுத்தீயில் தெரியும்

Continue reading “மௌனம் – கவிதை”