அப்பாவின் காதலி – சிறுகதை

அப்பாவின் காதலி

“மெயின் ரோட்டில் ரெண்டு ஏக்கரில் இருந்த தென்னந்தோப்பை, அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன் மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அடிமாட்டு விலைக்கு வித்துட்டான். எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”

முப்பத்தைந்து வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது.

இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.

வளவனின் அப்பா துரைபிள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறுவயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.

Continue reading “அப்பாவின் காதலி – சிறுகதை”

முயற்சி தேவையே – கவிதை

உலகம் தரும் எதிர்பார்ப்பு

குடும்பங்கள் தரும் சுமைகள்

உள்ளுணர்வு தரும் வலி

நினைவுகள் தரும் கண்ணீர்

உறவுகள் தரும் தடைகள்

Continue reading “முயற்சி தேவையே – கவிதை”

பழி தீர்ப்பு – சிறுகதை

ஆற்காடு சாலையின் வழியே குன்றத்தூரிலிருந்து வடபழனி வரை செல்லும் M88 பேருந்து பாய்க்கடை பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஸ்ருதி அதே பேருந்தில் கடைசி சீட்டில் அமர்ந்து யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

வடபழனி செல்வதற்காக முன் படிக்கட்டுகளின் வழியே ஏறிய சுரேஷின் பார்வையில் காலி இருக்கை ஒன்று தென்பட இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் பயணச்சீட்டை வாங்காமலே வேகமாக சென்று இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.

அந்த தடத்தில் ஓடும் பேருந்துகளில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். மாறாக அன்று அந்த பேருந்தில் நெரிசல் அதிகம் இல்லாதிருந்தது.

சென்னை நகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

Continue reading “பழி தீர்ப்பு – சிறுகதை”