எழத் தயங்காதே – கவிதை

1) பிறருக்கு கொடுப்பதைத் தடுக்காதே

2) உனக்கான இயல்பை உடைக்காதே

3) பொறாமையை உள்ளத்தில் விதைக்காதே

4) பொய்களைக் கூறி அடுக்காதே

Continue reading “எழத் தயங்காதே – கவிதை”

மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை

மைக்கேல் தாத்தா

மாதத்திற்கு ஒருமுறை முகச்சவரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். எத்தனை வயதிலிருந்து சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தேன் என்பது நினைவில் இருந்தால், இதுவரை எத்தனை சவரம் செய்துள்ளேன் என்பதை சுலபமாக சொல்லி விடலாம்.

அதே போல்தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலை முடியை வெட்டிக்கொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அக்குளுக்குள் சவரம் செய்து ஆறு மாதத்திற்கு மேல இருக்கும்.

அக்குளுக்குள் வேர்த்து வேர்த்து சடை பிடித்துப் போய் ஊரையே அழைத்து முடி எடுப்பு விழா எடுக்கலாம் அந்த அளவிற்கு வளர்ந்து கிட‌ந்தது.

Continue reading “மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை”