ரவா உப்புமா – சிறுகதை

ரவா உப்புமா

நாலுபக்கமும் களிமண்ணாலான சுவர். அதற்கு மேலே தென்னங்கீற்றாலான கூரை, அடுப்பங்கரைக்கு மட்டும், இரு கீற்று மறைப்பு, இதுதான் எங்கள் வீடு.

குளியலறை வீட்டுக்கு அருகிலேயே ஓடிய அரசலாறு. டாய்லெட் – அரசலாற்றின் ஓரம் உள்ள, செடி கொடிகள் மரங்கள் நிறைந்த காட்டுக் கரை.

டாய்லெட் நேரம் ஆண்கள் காலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள். பெண்கள் மாலை 6.30 மணிக்கு மேல் 7.30-க்குள்.

மேலும் லக்னம், ராசி எல்லாம் அவரவர் இஷ்டம். ஏனெனில் இருட்டு நேரத்தில் பாம்பு, பூச்சிகள் போன்றவற்றால் பின்னால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அவரவர்கள்தான் பொறுப்பு.

Continue reading “ரவா உப்புமா – சிறுகதை”

நிச்சயமான நிஜங்கள் – கவிதை

எல்லாவற்றையும் நான் பார்ப்பதால்

அதற்கு மேல் எனக்கு

எந்த தகுதியும் இல்லை.

அந்த எல்லாமும்

ஒரே மாதிரியாக 

வெவ்வேறாக இருப்பதால்

Continue reading “நிச்சயமான நிஜங்கள் – கவிதை”

மிருக வதை – சிறுகதை

மிருகம்

“தாமர”

“எஸ் மேடம்”

“குப்புராஜ் நகர்ல எனக்கு ஒரு பிரண்டு இருக்கான்னு சொல்லியிருக்கேன் இல்லையா?”

“ஆமா மேடம். தையல் கடை நடத்தறாங்கன்னு”

“ஆமா, அங்க போ. என்னவோ பிரச்சனை. மீட்டிங்கல இருக்கேன்.”

“ஒகே மேடம். உடனே கெளம்பிடறேன்.”

“டூட்டி எப்ப?”

“முடிச்சுட்டு இப்பதான் மேடம் வந்தேன். இப்பதான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.”

“அடடா, சாரி தாமர. நான் வேற ஆள.”

Continue reading “மிருக வதை – சிறுகதை”