மாசிலன் ஆதல் குறும்படம் விமர்சனம்

மாசிலன் ஆதல்

மாசிலன் ஆதல் குறும்படம் நவீனக் குறும்பட வரிசையில் ஒரு முக்கியமான படமாகும்.

விமர்சனத்திற்குப் போவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி.

வசனங்கள் தரும் பொருளை மட்டும் கொண்டு, கதையைப் புரிந்து கொள்பவர்களா நீங்கள்?

அப்படியென்றால், நீங்கள் இந்த விமர்சனத்தைப் படிக்காமல் இந்தக் குறும்படத்தைப் பார்க்காமல் இப்படியே ஓடி விடுங்கள்.

வசனங்கள் அற்ற, பாதிக்கதை மட்டுமே கூறி, மீதியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றால், ’இந்த மாதிரிப் படங்களே நம் இலக்கிய அறிவுக்குச் சுவை’ என்பவர்கள் மட்டும், இப்படத்தையோ விமர்சனத்தையோ பார்க்கலாம், படிக்கலாம்.

இக்குறும்படம் நவீனமானது. சொல்லப்பட்ட முறையால், எடுக்கப்பட்ட விதத்தால், இசைக்கப்பட்ட இசையால்.

Continue reading “மாசிலன் ஆதல் குறும்படம் விமர்சனம்”

எது தேவையோ அதுவே தர்மம் – குறும்படம் விமர்சனம்

எது தேவையோ அதுவே தர்மம்
எது தேவையோ அதுவே தர்மம் குறும்படம், எது தர்மம் என உங்களை யோசிக்க வைக்கும்.

“எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவாருன்னா
 நீயும் நானும் எதுக்கு”

என ஒவ்வொருவனும், அவனின் தேவைக்கேற்ப வாழ்க்கையை நெளித்து, சுழித்து, நிமிர்த்தி வாழ்ந்துட்டுப் போயிட‌றான்.

இதுல நீதிக்கு என்ன வேலை?

தர்மம் எது? இன்றையத் தேவைக்கு எது முக்கியமோ அதுவே தர்மம். அது அநீதியாக இருந்தாலும், அதுவே இங்கு தர்மம்.

Continue reading “எது தேவையோ அதுவே தர்மம் – குறும்படம் விமர்சனம்”

காடே கதை கூறு குறும்படம் விமர்சனம்

காடே கதை கூறு

காடே கதை கூறு குறும்படம் காட்டை மையம் கொண்ட அரசியல் படம்.

பணத்திற்கும் பணமற்றவைக்கும் இடையில் நடக்கும் போராட்டம்.

காட்சி ஒன்று. உள் நடப்பவைகளும் வெளிப்பாடுகளும் வேறு வேறு. அந்த அரசியல் பொதுமக்களுக்குத் தெரிவதேயில்லை.

மனதை அதள பாதாளத்திற்குள் கொண்டு சென்று அழுத்துவது போன்ற பிரமை. கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கும் சோகம்.

வலி, வேதனை, இயலாமை, துயர், அத்தனையையும் ஒட்டு மொத்தக் காட்சிகளிலும் அள்ளித் தெளித்திருப்பது மனதை ஏதோ செய்கிறது… உள்ஊடுறுவி திடுக்கிட வைக்கிறது.

Continue reading “காடே கதை கூறு குறும்படம் விமர்சனம்”

சவடால் குறும்படம் விமர்சனம்

சவடால்

சவடால் குறும்படம் ஒரு சாதனைப் படம்.

கிராமத்தின் பிடியில் வளர்ந்த பாசக்கார அப்பா, பக்கத்து ஊரிலிருக்கும் தன் மகளைக் காணச் செல்வதுதான் கதை.

அரை நூற்றாண்டாக நிலை மாறிப் போய்க் கிடக்கும் நகர்ப்புறத்தில், பணப் பைத்தியம் பிடித்துத் திரியும் மனிதர்களைத் தோலுரித்துக் காட்டும் மிகச் சிறப்பான காட்சிகள் நிறைந்திருக்கும் படமாக இப்படம் திகழ்கிறது.

Continue reading “சவடால் குறும்படம் விமர்சனம்”

தூக்குமரம் ‍குறும்படம் விமர்சனம்

தூக்குமரம்

தூக்குமரம் ‍குறும்படம் விமர்சனம் இந்த பதிவில் பார்ப்போம்.

தூக்குமரம் ஒரு சிறந்த குறும்படம்.

முதல் காட்சி

வாழ்வில் விரக்தி அடைந்து இறக்கும் எண்ணமுடன், தூக்குப்பட்டி என்னும் ஊரிலுள்ள தூக்குமரத்தில் தூக்குப் போட்டு இறக்க ஒருவர் வருகிறார்.

பெட்டிக்கடைக்காரர் ஒருவர், வந்தவரின் மனதைப் புரிந்து கொண்டு, தூக்குப் போட்டுக் கொள்ளக் கயிறை இலவசமாகத் தருகிறார். இதன் மூலம் அவரின் கடை பிரபலமாகி வியாபாரம் அதிகரிக்கும் எனக் கூறுகின்றார்.

Continue reading “தூக்குமரம் ‍குறும்படம் விமர்சனம்”