கானல் நீர்- சிறுகதை

நிரவியில் ஒரு செல்வந்தர் வீட்டில் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு தடபுடலாக திருமணம் நடந்து கொண்டிருந்தது.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது.

அந்த ஊரில் பெரிய பெயர் போன சமையல்காரர் மெய்தீன் கைப்பக்குவதில் சமையல் தயாரிக்கப்பட்டு பந்திப் பரிமாறப்பட்டது.

Continue reading “கானல் நீர்- சிறுகதை”

இருமனம் திருமணம் – சிறுகதை

இந்து திருமணம்

“என்னங்க….” கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா.

ஏறக்குறைய. அதேநிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.

“என்ன கீதா?”

“எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க. நம்ம ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?”

“பயப்படாதே. நம்பிக்கையோட இருப்போம். நல்லதே நடக்கும்.”

Continue reading “இருமனம் திருமணம் – சிறுகதை”

ஆலங்கட்டி – சிறுகதை

அதிகாலை 3 மணி.

“நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது; இந்த வீட்டுக்கு நல்ல காலம் பொறக்குது.

இத்தனை காலம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு காலம் வரப்போகுது. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா.

இந்த வீட்டம்மா மனசுல நினைச்சதெல்லாம் நடக்க போகுது.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது.”

சத்தம் கேட்டு எழுந்தாள் மாலதி.

Continue reading “ஆலங்கட்டி – சிறுகதை”

இனிய சிநேகிதிக்கு – சிறுகதை

இனிய சிநேகிதிக்கு - சிறுகதை

சென்னையின் பிரபல ஜவுளிக்கடையில் இருந்தனர் கோமளம் குடும்பத்தினர்.

ஆயிற்று, அனைவர்க்கும் ஜவுளி எடுத்து முடித்தாயிற்று, இனி கிளம்ப வேண்டியதுதான்.

மகன் அஜய் பில் பணம் சரிபார்த்து கொடுக்க எத்தனிக்கையில் மருமகள் சுஜா, அவனது காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்த்தாள் கோமளம்.

Continue reading “இனிய சிநேகிதிக்கு – சிறுகதை”

மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை

பழமை வாய்ந்த பெரிய கோயில் ஒன்றில், மார்கழி மாதம் என்பதனால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகின.

அருகில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

Continue reading “மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை”