பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை

யார் கொடுத்து வைத்தவர்? - சிறுகதை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பிறந்த ஊரில் பங்குனி மாதம் நடைபெறும் அம்மன் பொங்கல் திருவிழா கொரனா நோய் பரவல் காரணமாக நடைபெறவில்லை.

இந்த வருடம் கொரனாவுக்கான தடை நீக்கப்பட்டதால் திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஊரில் தீர்மானிக்கப்பட்டது.

ஊரில் உள்ள எல்லோர் வீட்டிலும் வெளியூரிலிருக்கும் விருந்தினர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

என் பெற்றோரும் வெளியூரில் இருக்கும் எனக்கும் என் தம்பிக்கும் அழைப்பு விடுக்க, நாங்கள் இருவரும் அவரவர் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவிற்காக ஆஜரானோம்.

Continue reading “பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை”

உயிர்மேல் ஆசை – சிறுகதை

உயிர்மேல் ஆசை - சிறுகதை

“செய்யுங்க, வேண்டாம்னு சொல்லலே. அகலக்கால் வைக்காதீங்க. பெரிய ஸ்பெஷலிஸ்ட், கிளினிக்கெல்லாம் தேவையா? ஜி.எச்-ல அட்மிட் பண்ணி பார்த்துக்கிட்டா பத்தாதா?”

“என்ன மீரா, இப்படிப் பேசறே? நாளைக்கு அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா மூத்தவனாய் இருந்துக்கிட்டு நான்தான் சரியா கவனிக்கலேன்னு எல்லாரும் பேசமாட்டாங்களா?”

“நீங்க மட்டும்தான் அவருக்குப் பிள்ளையா? உங்ககூடப் பிறந்தவங்க ரெண்டுபேர் இருக்காங்க.

Continue reading “உயிர்மேல் ஆசை – சிறுகதை”

அன்னக்கிளி – சிறுகதை

அன்னக்கிளி

அன்னக்கிளி எங்கள் கிராமத்தில் வசித்த ஒரே ஒரு திருநங்கை.

அன்னக்கிளி என்பது ஊரார்கள் வைத்த பட்ட பெயர். அதுவே நிலைத்து விட்டது. உண்மையான பெயர் வேலாயுதம்; பூர்விகம் ராமநாதபுரம்.

தான் ஒரு திருநங்கை என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு கிளம்பி வந்து, எங்கள் கிராமத்தில் வந்து தங்க ஆரம்பித்து 30 வருடத்திற்கு மேலாகிவிட்டது.

அன்னக்கிளி எங்கள் ஊரின் முக்கிய அங்கம்; என்னதான் எல்லோரும் கிண்டலடித்தாலும், துறுதுறுவென்று வளைய வரும் ஊரின் செல்லப் பிள்ளை.

Continue reading “அன்னக்கிளி – சிறுகதை”

குடை – சிறுகதை

குடை

இப்போதே மணி ஆறரை. நன்றாக இருட்டி விட்டது.

சோதனை போல டோல்கேட் பஸ் இன்னும் வந்தபாடில்லை. தடுக்கி விழுந்தால் ஏர்போர்ட், டோல்கேட் பஸ் மீதுதான் விழ வேண்டியிருக்கும்.

இப்போதுள்ள நிலைமையோ தலைகீழ். நம் அவசரத்திற்கு ரொம்ப எதிர்பார்க்கும்போது தான் இப்படி காலை வாரிவிடும்.

Continue reading “குடை – சிறுகதை”

உயிர் உருகும் தருணம் – சிறுகதை

ஆறுமுகம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தன் ஒரே மகன் பரணியை வருமானவரித்துறை அதிகாரியாக உருவாக்கி இருந்தார். அவன் திருமணத்தில்தான் சிக்கல்.

பரணி அகல்யா என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.

அகல்யா, பரணி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் சம அந்தஸ்து இளநிலை அதிகாரி. அப்பா இல்லாத பெண். அம்மாதான் உலகம்.

ஆண்–பெண் நட்பு, காதல் இதில் எதிலும் நம்பிக்கை இல்லாதவள். அதனால்தான் போட்டித் தேர்வில் வென்று இந்த இளம் வயதில் அதிகாரியாகி இருக்கிறாள்.

Continue reading “உயிர் உருகும் தருணம் – சிறுகதை”