மாட்டுத் தொழுத்தில் கட்டியிருந்த பசுமாடு நிமிடத்திற்கு ஒருமுறை அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தது. ஈன்று ஓரிரு மாதங்களே ஆகியிருந்தது.
கன்றுக் குட்டியை அதன் அருகிலேயே சற்றுத் தள்ளிக் கட்டியிருந்தார்கள். இருந்த இடத்திலிருந்து நகர முடியாமல் கன்றுக் குட்டியும் பசுவின் குரலுக்கு எதிர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.
புழக்கடை பக்க கதவைத் திறந்து கொண்டு தொழுவத்திற்குள் வந்தார் பார்த்தசாரதி – மோகனின் தந்தை. அதிகாலை நேரம், பசுமாட்டின் அருகில் வந்தவர் அதைத் தட்டிக் கொடுத்து முதுகைத் தடவினார்.
Continue reading “அழகு நிலா – சிறுகதை”