பெருந்தன்மை – சிறுகதை

பெருந்தன்மை

காலை 8 மணிக்கே ஆட்கள் வேலைக்கு வந்து விட்டார்கள். மார்பிள் பாலிஷ் போடுகிறவர், உதவியாளர் மற்றும் சித்தாளாக ஒரு பெண்.

குளிக்க கிளம்பிய மருதநாயகம் மாடி வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு, வந்திருந்தவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

பாலிஷ் போடுகிறவர் சொன்னார். “சார், இன்று அதிகபட்ச வேலை முடிந்து விடும். இந்த சித்தாளுக்கு நாளை வேறு ஒரு வேலை இருக்கு. அதனால் இவங்க அக்கா நாளை சித்தாள் வேலைக்கு வருவாங்க.” என்றவர் பாலிஷ் மெஷினை ஓட்ட ஆரம்பித்தார்.

Continue reading “பெருந்தன்மை – சிறுகதை”

அழகு நிலா – சிறுகதை

அழகு நிலா

மாட்டுத் தொழுத்தில் கட்டியிருந்த பசுமாடு நிமிடத்திற்கு ஒருமுறை அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தது. ஈன்று ஓரிரு மாதங்களே ஆகியிருந்தது.

கன்றுக் குட்டியை அதன் அருகிலேயே சற்றுத் தள்ளிக் கட்டியிருந்தார்கள். இருந்த இடத்திலிருந்து நகர முடியாமல் கன்றுக் குட்டியும் பசுவின் குரலுக்கு எதிர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

புழக்கடை பக்க கதவைத் திறந்து கொண்டு தொழுவத்திற்குள் வந்தார் பார்த்தசாரதி – மோகனின் தந்தை. அதிகாலை நேரம், பசுமாட்டின் அருகில் வந்தவர் அதைத் தட்டிக் கொடுத்து முதுகைத் தடவினார்.

Continue reading “அழகு நிலா – சிறுகதை”

தவப்புதல்வன் – சிறுகதை

தவப்புதல்வன்

தவப்புதல்வன் ஓர் அருமையான சிறுகதை.

காவிரிப் பாலம் தான் திருச்சியின் பீச்.

காவிரி கரை புரண்டு ஓடாவிட்டாலும், பாலச்சுவரைப் பிடித்துக் கொண்டு, மாலை நேர இதமான காற்றின் சுகத்தை அனுபவித்தவாறே மணிக்கணக்கில் காவிரியைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விடுவது, மக்களின் பொழுது போக்கு அம்சமாகி விட்டது.

பல்வேறு சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள், செயல்கள் மூலம் ஏற்படும் ஒருவிதமான இறுக்கத்தை மாலை வேளையில் காவிரித் தாயின் திருவடிகளில் இறக்கி வைத்து விட்டுச் செல்வதில் மக்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி.

Continue reading “தவப்புதல்வன் – சிறுகதை”

எண்ணங்கள் வெளுப்பதில்லை – சிறுகதை

எண்ணங்கள் வெளுப்பதில்லை

கல்கத்தாவுக்கு மாற்றலாகிச் செல்லும் மேலதிகாரியை ஸ்டேஷனில் வழியனுப்பக் குடும்ப சகிதம் வந்து கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன்.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்குத்தான். தில்லை நகரிலிருந்து எட்டரை மணிக்குக் கிளம்பியிருந்தாலே போதுமானது.

ஒரு மாற்றத்திற்காக அன்றைய இரவு உணவை, கவிதாவில் வைத்துக் கொள்ள ஏகமனதாக அனைவரும் முடிவெடுத்திருந்ததால், ஏழே முக்கால் மணிக்கே காரை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கிளம்பியாகி விட்டது.

Continue reading “எண்ணங்கள் வெளுப்பதில்லை – சிறுகதை”

இந்த புன்னகை என்ன விலை?

இந்த புன்னகை என்ன விலை?

“ஏய் சித்ரா… இங்கே வா சீக்கிரம்” கணவனின் கத்தலைக் கேட்டு, போட்டது போட்டபடி கிடக்க சமையலறையிலிருந்து அவசர அவசரமாய் ஹாலுக்கு வந்தாள் சித்ரா.

“இவனைப் முதல்ல பிடி. கர்மம்… கர்மம் இதோட மூணு லுங்கி மாத்திட்டேன். சனியன், இவனுக்கு இதே வேலையாய்ப் போச்சு.”

தன் ஒரு வயது மகனை இரு கைகளால் மார்புக்கு நேராக அந்தரத்தில் தூக்கிப் பிடித்தபடியே முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

அவனது பனியன் பாதியும், லுங்கி பாதியும் நனைந்திருந்தது.

Continue reading “இந்த புன்னகை என்ன விலை?”