சுனை சாமியார் – சிறுகதை

சுனை சாமியார்

”சுனை சாமியார் பத்தி தெரியுமா? தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட், டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும் இருக்கான். என்ன, பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி. அவ்வளவு தான். மத்த‌படி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்” என்ற மதினியின் வாயைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான் சரவணன். Continue reading “சுனை சாமியார் – சிறுகதை”

கருணையின் சிகரம் – சிறுவர் கதை

கருணையின் சிகரம்

நமக்கு நன்மை செய்பவர்களை எந்த சூழ்நிலையிலும் புறந்தள்ளக் கூடாது என்பதை கருணையின் சிகரம் என்ற இக்கதை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பச்சை வனம் என்ற காட்டில் ஓங்கி உயர்ந்த மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் ஏராளமான பறவைகள் பகலில் வந்து அமரும்.

காக்கை, குருவி, செம்பருத்தான் உள்ளிட்ட பறவைகள் கூடுகட்டி வசித்து வந்தன.

அம்மரத்தில் இருந்த பொந்தில் கிளி ஒன்று வசித்து வந்தது. Continue reading “கருணையின் சிகரம் – சிறுவர் கதை”

தாயின் மணிக்கொடி – சிறுகதை

தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற பாரதியாரின் பாடலை, தன்னுடைய மகளுக்கு சுதந்திர தினத்தில் பாடுவதற்கு ராகத்துடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பரதன்.

பரதனின் மகள் ரம்யா கோவையின் பெரிய சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

தமிழில் பாடல் முழுவதையும் மனப்பாடம் செய்து ராகத்துடன் பாடுவது என்பது பெரிய தவமாகத்தான் இருந்தது ரம்யாவிற்கு. Continue reading “தாயின் மணிக்கொடி – சிறுகதை”

பசியைப் போக்குவோம் – சிறுகதை

பசியைப் போக்குவோம்

மண்வாசனை மயக்க, மழை லேசான தூரலுடன் தொடங்கி, விரைவான துளிகளாய் மண்ணைக் குழப்பியது.

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷாம், பொழிகின்ற மழையை ரசித்துக் கொண்டே சாப்பிட்டான்.

ஒருஅகலமான தட்டில் சிக்கன் பிரியாணியும், அவித்த முட்டையும், பொறித்த கோழிக்கறி துண்டுகளும் நிரம்பி வழிந்தன. ஷாம் பாதி சாப்பிட்டுவிட்டு மீதியைத் தட்டிலேயே வைத்தான். Continue reading “பசியைப் போக்குவோம் – சிறுகதை”

நிலா சோறு – கிராமத்து சிறுகதை

நிலா சோறு

“நிலா சோறு, அப்படினா என்னம்மா?” என்றாள் மூன்று வயது மகள் வாணி, தன் தாய் ரமாவிடம்.

“என்ன, திடீருன்னு நிலா சோறு பத்தி கேட்க?”

“இல்லம்மா பக்கத்து வீட்டு பரணி, சித்ரா பௌர்ணமிக்கு நிலா சோறு சாப்பிடப் போறதா எங்ககிட்ட சொன்னான். அதான் பாப்பா அதப்பத்தி கேட்கா.” என்றான் ஐந்து வயது ரமணி.

“சித்திரை மாசம் பௌர்ணமி அன்னைக்கு இரவு, எல்லோரும் வீட்ல வட பாயசத்தோட விருந்து சமைச்சு மொட்ட மாடியில, ஆத்தங்கரையில, வீட்டு முத்தத்துலன்னு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதத்தான் நிலா சோறுன்னு சொல்லுவாங்க.

வர்ற சித்திரா பௌர்ணமிக்கு, நம்ம வீட்ல எல்லாரும் மொட்ட மாடியில நிலா சோறு சாப்பிடுவோம் சரியா?” என்றாள் ரமா.

ரமா கூறியதைக் கேட்டதும் குழந்தைகள் இருவரும் “ஹே ஜாலி, ஜாலி” என்று குதித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின்பு கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்து, பின்னர் அங்கேயே வேலை வாங்கி, கல்யாணத்திற்குப் பின்பும் சென்னையிலேயே செட்டிலாகி விட்டவள் ரமா.

நிலா சோறு என்ற வார்த்தையைக் கேட்டதும், அவளுக்கு ஊரில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சாப்பிட்ட நிலா சோறு நினைவிற்கு வந்தது. வித்தியசமான நிகழ்வு அது.

சென்னையில் யாருக்கும் அப்படியொரு நிலா சோறு சாப்பிட்ட அனுபவம் இருக்காது என்ற பெருமிதத்தோடு, பழைய நினைவுகளில் மூழ்கினாள் ரமா. Continue reading “நிலா சோறு – கிராமத்து சிறுகதை”