தேவையான பொருட்கள்
தோசை மாவு தயார் செய்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு : 250 கிராம்
மிளகாய் : 4 நறுக்கியது
வெங்காயம் : 3 கருவேப்பிலை, மல்லிச்செடி சிறிதளவு Continue reading “மசாலா தோசை செய்வது எப்படி?”
இணைய இதழ்
தேவையான பொருட்கள்
தோசை மாவு தயார் செய்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு : 250 கிராம்
மிளகாய் : 4 நறுக்கியது
வெங்காயம் : 3 கருவேப்பிலை, மல்லிச்செடி சிறிதளவு Continue reading “மசாலா தோசை செய்வது எப்படி?”
செய்முறை
இடியாப்ப மாவில் சிறிது உப்புத்தண்ணீர் தெளித்து புட்டு மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும்.
புட்டுக் குழலில் முதலில் தேங்காய்ப்பூவைப் போட்டு அடுத்து ஒரு கை மாவு போட்டு அடுத்து சீனி கொஞ்சம் தூவவும். அடுத்து தேங்காய்ப்பூ தூவவும்.
பழையபடி மாவு, சீனி, தேங்காய்ப்பூ இவ்வாறு குழாயின் மேல் பாகம் வரை நிரப்பி மூடி, கலயத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி குழாயை அதில் பொருத்தி வேக வைக்க வேண்டும்.
மூடியிலுள்ள தூவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும். சுவையான குழாய்ப்புட்டு ரெடி!
குழிப்பணியாரம் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயார் செய்யப்படுகிறது. இது சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகிறது. இனிப்புக் குழிப்பணியாரமே பொதுவாக குழிப்பணியாரம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “குழிப்பணியாரம் செய்வது எப்படி?”
தேவையான பொருட்கள்
மைதா மாவு : 2 கப்
வாழைப்பழம் : 1
சீனி : 1 கப்
எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை
எல்லாச் சாமன்களையும் சிறிது நீர் சேர்த்து இளக்கமாய்ப் பிசைந்து ¼ மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். வாணலியில் எண்ணெயையை காய வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்ற வேண்டும். பணியாரம் எழும்பியவுடன் திருப்பிப்போட்டு வெந்தது பார்த்து எடுக்க வேண்டும். சுவையான மைதா பணியாரம் ரெடி!
விரும்பினால் 1 மேஜைக்கரண்டி ரவை சேர்த்து வாழைப்பழம் போடாமலும் சுடலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி : 100 கிராம்
உளுந்து : 75 கிராம்
பசும்பால் : 200 கிராம்
தேங்காய் பால் : ஒரு டம்ளர்
சர்க்கரை : 100 கிராம்
ஏலக்காய் பொடி : சிறிதளவு
பொரிக்க எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியையும், உளுந்தையும் ஐந்து மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைக்கவும். இந்த மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். வெள்ளை நியமாக பொறித்து எடுக்கவும்.
பொறித்து எடுத்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும், சுவையான பால் பணியாரம் ரெடி!
பால் செய்முறை
பசும் பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமயம் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.