கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்

அரசியல் கட்சிகள்

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நமது அணணன் ‍‍‍‍‍‍‍‍___________ அவர்கள்.

எனவே நமது அண்ணனுக்கு நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் _________ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.

ஒரு வாரமாக‌ எந்நேரமும் இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

முப்பொழுதும் காதில் பாலும் தேனும் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

வடையை வாயில் வைத்திருந்த காகத்தை நரி பாட்டுப் பாட சொன்ன கதை என் மனதில் தோன்றுகிறது. Continue reading “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்”

நீதி இல்லாத நாடு இந்தியா

நீதி இல்லாத நாடு இந்தியா

நீதி இல்லாத நாடு இந்தியா என்று ஒரு பெரியவர், தன் அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு பெரியவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

நகரப் பேருந்தில் நின்று கொண்டு, என் அலைபேசியில் மின்னஞ்சல்களைப் படித்துக் கொண்டே பயணம் செய்த எனக்கும் அது காதில் விழுந்தது.

ஒரு நிமிடம் என் மனம் வேதனையில் துடித்தது.

இது உண்மையா? என்று என் அறிவு யோசித்தது; உண்மை என்றே ஒத்துக் கொண்டது. Continue reading “நீதி இல்லாத நாடு இந்தியா”

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரை ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

இல்லற வாழ்வில் சிக்கனம்

இல்லற வாழ்வில் சிக்கனம் வேண்டும். எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்றிருப்பது நல்லது.

சிலர் சிக்கனத்தைக் கருமித்தனம் என்று கருதுகிறார்கள். சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. Continue reading “இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு”

வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை

வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை

வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை என்ற  இக்கட்டுரை  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரைகளில் மூன்றாவது மற்றும் நான்காவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம். Continue reading “வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை”

வாழ்வில் இல்லாதது என்ன?

வாழ்வில் இல்லாதது என்ன?

வாழ்வில் இல்லாதது என்ன? என்ற இக்கட்டுரை மணமக்களுக்கு என்னும் நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரைகளில் இரண்டாவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

திருவள்ளுவர் ஒருநாள் ஒரு சாலையில் நடந்து செல்லும் பொழுது, ஓர் ஏழைக் குடிசையில் புகுந்தார். கூரைத் தாழ்வாராம், அதிலுள்ள பல ஓட்டைகள், கிழிந்த பாய், சில சட்டிகள் மட்டுமே இருந்தன. Continue reading “வாழ்வில் இல்லாதது என்ன?”