அன்றைய காரைக்கால் மிகவும் அமைதியாக இருக்கும்.
காத்தா பிள்ளை கோடியில் உள்ள முத்துப் பிள்ளை ரொட்டி கடையில் பக்கோடா என்றால் பேமஸ்.
அப்போதெல்லாம் பக்கோடாவை பேப்பர் சுத்தி பொட்டலமாக கொடுப்பார்கள். ஒரு பொட்டலம் 75 காசு.
ஒரு மாம்பழ வியாபாரி தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு 5 பொட்டலங்களை வாங்கி தன் பழ கூடையில் வைத்துவிட்டு சைக்கிளை தள்ளி கொண்டு நடந்தார்.
சிறிது தூரத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு டைமண்ட் தியேட்டர் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு எதிரே உள்ள கடைக்குள் சென்று பழ வியாபாரி திரும்பி வெளியே வந்தார்.
நீண்ட நாள் பழகிய நண்பர் கண்ணில் பட்டார்.
“அடடே வாங்க பாய், எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகுது ஆளையே காணோம்.”
Continue reading “ஒரு பெண் நினைத்தால் – கதை”