பொங்கலோ பொங்கல் – கவிதை

பொங்கல்

பொங்குதமிழ்க் கடலலையில் புதுச்சுடரைப் படரவிட்டுச்
சங்கெழுப்பி முத்தெழுப்பிச் சலசலக்கும் புள்ளெழுப்பிப்
பங்கயமேல் படுத்துறங்கும் பனிப்போர்வை தானெழுப்பி
எங்கிருந்தோ இயக்குகிற எரிகதிரைப் போற்றுகின்றோம்

Continue reading “பொங்கலோ பொங்கல் – கவிதை”

என்னதான் மிச்சமிருக்கு?

ஊரைச்சுற்றி ஆறு ஓட

காடுகரை செழிச்சுக் கிடக்க

மாடு மேய்க்க போன எனக்கு

பசி எடுக்க வழியுமில்லை

பாட்டுக்கும் பஞ்சமில்லை

Continue reading “என்னதான் மிச்சமிருக்கு?”

ஆலங்கட்டி – சிறுகதை

அதிகாலை 3 மணி.

“நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது; இந்த வீட்டுக்கு நல்ல காலம் பொறக்குது.

இத்தனை காலம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு காலம் வரப்போகுது. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா.

இந்த வீட்டம்மா மனசுல நினைச்சதெல்லாம் நடக்க போகுது.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது.”

சத்தம் கேட்டு எழுந்தாள் மாலதி.

Continue reading “ஆலங்கட்டி – சிறுகதை”

உறைகுருதிக்கு அனல்காய்க

தாய்ச்சி யான தமிழ்நிலத்தில்
தவத்தால் வந்து பிறந்தவனே
காய்ச்சுப் பாலின் சுவையெனவே
கன்னல் தமிழைக் கொண்டவனே
வீச்சும் கைவாள் எறிதிறலில்
வெங்கான் சீயம் தலைவிழவே
பீய்ச்சுங் குருதிப் புனல்நடந்து
புழுதிக் காட்டை உழுதவனே

Continue reading “உறைகுருதிக்கு அனல்காய்க”