பாரிஜாதம் – கதை

கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.

இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன.

Continue reading “பாரிஜாதம் – கதை”

இன்னா செய்தாரை ஒறுத்தல் – கதை

அன்று காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போதே அன்றைய ஆங்கில வகுப்பை நினைத்து ரகுவுக்கு பயம் காரணமாக வயிற்றில் புளியைக் கரைத்தது.

‘கோடை விடுமுறையைக் கழித்த விதம்’ பற்றி மாணவர்களைக் கட்டுரை எழுதி சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார் ஆங்கில ஆசிரியர். வகுப்பில் கண்டிப்பாக கட்டுரையைப் பற்றிக் கேட்பார்.

ரகுவுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் படிப்பில் இல்லை. ஆங்கில ஆசிரியர் கூறியிருந்ததை சுத்தமாக மறந்து விட்டிருந்தான்.

Continue reading “இன்னா செய்தாரை ஒறுத்தல் – கதை”

குடும்பம் ஒரு கதம்பம் – கதை

“பிள்ளை இல்லாதவன் வீட்டில் கிழவன் துள்ளி குதித்து ஆட்டம் போட்டானாம் அப்படி இருக்கு உங்களுடைய கூத்து”

“ஏன் நான் என்ன செஞ்சுப்புட்டேன் இப்போ? எப்பவும் போல தான் இருக்கேன். வழக்கத்துக்கு மீறி கொஞ்சம் அதிக சந்தோஷமா இருக்கேன்.”

Continue reading “குடும்பம் ஒரு கதம்பம் – கதை”

தன் வினை தன்னைச் சுடும் – கதை

மங்களுரில் ராமு என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு நன்னன், பொன்னன் என இரு மகன்கள் இருந்தனர்.

நன்னன் பெயரில்தான் நன்னனே தவிர தந்திரம் நிறைந்தவன். ஏமாற்றுக்காரன். பொன்னன் நல்லவன். சூதுவாது தெரியாதவன்.

ராவிடம் ஒருகாரை வீடு, ஒருகூரை வீடு என இரு வீடுகளும், ஒரு கறவை மாடு, ஒரு மலட்டு மாடு என இரு மாடுகளும், நன்செய், புன்செய் என இருநிலங்களும் இருந்தன.

Continue reading “தன் வினை தன்னைச் சுடும் – கதை”

பணமில்லா பரிவர்த்தனை – கதை

இரவு 8:30 மணி

வாசலில் “..அம்மா… அம்மா ….” என்று கூப்பிடும் சத்தம் கேட்டு மங்கலம் வெளியே வந்தாள்.

“இதோ வந்துட்டேன்பா. யாரு? அட! நம்ப பிச்ச கண்ணு. இந்த நேரத்துல வந்து இருக்கியேப்பா… வீட்டுல ஒன்னும் சமைக்கல. நாங்களே சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு டெலிவரி பாய தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கிறோம்.”

Continue reading “பணமில்லா பரிவர்த்தனை – கதை”