காத்திருக்கும் சுகம் – சிறுகதை

காத்திருக்கும் சுகம்

அன்று அந்த மேனிலைப் பள்ளி காலை வேளையிலேயே அமர்க்களப்பட்டது.

ப்ளஸ் ஒன் மாணவர்கள், ப்ளஸ் டூ முடிந்து பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்களுக்காக பிரிவு உபசார விழா ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ப்ளஸ் டூ தேர்வுகள் துவங்க இன்னும் ஓரிரு தினங்களே இருந்தன.

“அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?” என மாணவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

Continue reading “காத்திருக்கும் சுகம் – சிறுகதை”

வாய் முகூர்த்தம் – சிறுகதை

வாய் முகூர்த்தம் - சிறுகதை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, நான் அவரை சந்தித்தேன். அவர் வேறு யாரும் இல்லை எனது சித்தப்பாதான்.

என் அப்பாவின் உடன் பிறந்த தம்பி. இருவருக்குள்ளும் தாய் வழி உறவுதானே தவிர, தந்தை வழி உறவு கிடையாது.

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அவரது வீட்டுக்குள் சென்றேன்.

வீட்டில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அந்த கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார் அவர்.

நான் அவர் அருகில் சென்றுதான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 

Continue reading “வாய் முகூர்த்தம் – சிறுகதை”

அன்னதானம் – சிறுகதை

அன்னதானம் - சிறுகதை

“என்னங்க, என்னங்க நம்ம பையன் பிறந்த நாளுக்கு அன்னதானம் போடலாம்னு சொன்னீங்களே!இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.

எங்க போடப் போறீங்க? யாருக்கு போடப் போறீங்க? எந்த ஹோட்டல், என்னென்ன ஆர்டர் பண்ணப் போறீங்க?

எதுவும் ரெடியானா மாதிரி எனக்கு தெரியலியே!” என மூச்சுவிடாமல் கேட்டு முடித்தாள் கோதாவரி.

Continue reading “அன்னதானம் – சிறுகதை”

இதயத்தில் ஒருத்(தீ) – சிறுகதை

இதயத்தில் ஒருத்(தீ) - சிறுகதை

மாலை நேரத்தில் சுமார் நாலரை மணி அளவில், வேலை விசயமாக வெளியூருக்கு செல்ல இருந்த‌ என் நண்பன் அரவிந்தை வழியனுப்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் அவனுடன் நின்று கொண்டிருந்தேன்.

அரவிந்த் செல்ல வேண்டிய பேருந்துக்கு முன்னதாக நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து 515F என்ற தடத்தில் ஓடும் பேருந்து, நாங்கள் நின்று கொண்டிருந்த அதே நிறுத்தத்தில் வந்து நின்றது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பேருந்தில்தான் நான் அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள்.

Continue reading “இதயத்தில் ஒருத்(தீ) – சிறுகதை”

பத்தில் ஒன்று – சிறுகதை

பத்தில் ஒன்று - சிறுகதை

இருவரும், வெளியே கிளம்பிக் கொண்டிருந்த சமயம் செல்பேசி சிணுங்கியது.

மலர் கடுப்பானாள்.

“முதல்ல செல்பேசியை அணைத்து வைங்க” எனச் சீறினாள்.

எதிர் முனையில் பழனி, மோகனின் நண்பன்.

“என்னப்பா?” என மோகன் ஆரம்பிக்க…

மலர் கண்களில் கோபம் தாண்டவமாடியது.

Continue reading “பத்தில் ஒன்று – சிறுகதை”