அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை

அன்பிற்கு பஞ்சம்

என்னுடைய மாமனாரின் முதல் நினைவு நாளுக்காக, மனைவி, குழந்தைகள் என குடும்பம் சகிதமாக விருதுநகரில் இருந்த மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.

என்னுடைய சொந்த ஊரும் விருதுநகர் தான். நான் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பினை முடித்ததும் இந்த ஊரில்தான்.

கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றவன், அங்கேயே வேலையும் கிடைக்க, அப்பாவின் டிரேடிங்கையும் சென்னைக்கு மாற்றச் சொல்லி அம்மா, அப்பா மற்றும் பாட்டியுடன் சென்னையிலேயே செட்டிலாகி விட்டேன்.

Continue reading “அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை”

அடுத்த கதை – சிறுகதை

அடுத்த கதை – சிறுகதை

முகிலனுக்கு வெகு நாட்களாகவே உள்ளூர‌ ஓர் குறை. எல்லோரும் அவன் எழுதும் கதைகளை ரசித்துப் படித்து பாராட்டும் போது ஸ்வர்ணா மட்டும் ஏன் எவ்வித அபிப்ராயமும் கூறுவதில்லை?

ஸ்வர்ணா வேறு யாருமல்ல; அவனுடைய மனைவிதான்.

அலுவலக நண்பர்கள் அனைவருமே அவனது கதைகளைப் படித்து விட்டு, அவரவர் அபிப்ராயங்களைக் கூறி வந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் அவனே ஒவ்வொருவரிடமும் கதைகள் பிரசுரமான பத்திரிக்கைகளை எடுத்துச் சென்று காண்பித்தது போய், இப்போதெல்லாம் அவர்களே வலிய இவனிடம் வந்து கங்கிராட்ஸ், சூப்பர்ப், வொண்டர்ஃபுல், மார்வலஸ் என அவனது கதைகளை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

Continue reading “அடுத்த கதை – சிறுகதை”

ஓலா – சிறுகதை

ஓலா - சிறுகதை

பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு அதிகாலை திருமணம்.

சென்னையிலிருந்து எப்படியாவது போயே ஆகவேண்டும், இல்லையேல் சுனாமி வந்து விடும். ஏற்கனவே எங்கள் உறவு என்கிற ஓஸோனில் ஓட்டை விழுந்து கிடக்கிறது .

அலுவலகத்தில் ஒரு நாள் விடுப்பு கேட்டால் பூகம்பம் வெடிக்கும். நான் இல்லையென்றால் அலுவலகமே ஸ்தம்பித்து விடும் என்கிறார்கள்.

மனைவியை மட்டும் அனுப்பி வைக்கலாம் என்றால், கொரோனாவால் பஸ் போக்குவரத்தும் இல்லை.

“ஓலா அவுட் ஸ்டேஷன் டாக்ஸி புக் செய்து தருகிறேன். நீ மட்டும் போய் வா.” என்று சொன்னதனால் ஏற்பட்ட சண்டை, சீன எல்லையான கள்வான் பள்ளத்தாக்கில் நடந்ததை விட மோசமாக இருந்தது.

“அதிகாலை 3 மணிக்கு யாருன்னே தெரியாத ஓலா டிரைவரை நம்பி என்னை அனுப்பி வைக்க நினைக்கிறீங்களே. நாட்டு நடப்பு எதாவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” என்று அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் டாப் கிளாஸ். தலைமை நீதிபதியே இவ கிட்ட நிறைய கத்துக்கனும்.

Continue reading “ஓலா – சிறுகதை”

பிறைகள் – சிறுகதை

பிறைகள் – சிறுகதை

சென்னை சென்று மகள் காவேரி வீட்டில் ஒரு வாரம் தங்கி விட்டு திருச்சி திரும்பி நான்கு நாட்கள் ஆகியும், அம்மா மகேஸ்வரியின் மனம் ஒருவித தத்தளிப்பிலேயே மூழ்கியிருந்தது.

இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டுப் போகும்படி காவேரி எவ்வளவோ வற்புறுத்தியும், கௌரவம் குறுக்கே நின்று தடுத்ததால் கிளம்பி வந்துவிட்டாள்.

என்னதான் பெற்ற மகள் வீடு என்றாலும், மாப்பிள்ளை வீட்டில் எவ்வளவு நாட்கள் தங்குவது?

மாப்பிள்ளை மறுப்பு ஏதும் கூறப் போவதில்லை. இருப்பினும் ஒருவித தர்மசங்கடம் உள்ளத்தை உறுத்தியதால், மகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை.

Continue reading “பிறைகள் – சிறுகதை”

மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை

அருள் உடைமை

சினிமா இயக்குநர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவருடைய கதைக்கு நான் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி வந்தார்.

அப்போது நான் ரவி என்கிற இயக்குநரின் படத்தில் துணை இயக்குநராக வேலை செய்து வந்தேன். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருந்தது.

Continue reading “மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை”