கதை கதையாம் காரணமாம் – சிறுகதை

கதை கதையாம் காரணமாம்

பள்ளியில் ஆண்டு மலர் தயாரித்து வெளியிடப் போகிறார்களாம்.

மாணவர்களின் பங்கு அதில் நிறையவே இடம் பெற வேண்டும் என்றும், ஆண்டு மலருக்கான கதைகள், கட்டுரைகள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கை வந்தது.

தன் எழுத்தாற்றலைக் காண்பிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருப்பது கண்டு சரவணனின் மனம் சிறகடித்துப் பறந்தது.

என்ன எழுதுவது? கதையா? கவிதையா? கட்டுரையா? ஜோக்கா? அல்லது புதிரா?.

Continue reading “கதை கதையாம் காரணமாம் – சிறுகதை”

முகக்கவசம் ‍- சிறுகதை

முகக்கவசம்

நான் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கையில் சட்டென்று அவரைப் பார்த்த போது எனக்கு மிகவும் சங்கடமாகவும் பயமாகவும் இருந்தது. இது இரண்டாவது முறை, நான் அவரிடம் மாட்டிக் கொள்வது.

எதற்கெல்லாம் பயம் கொள்வது என்ற வரையறையே இல்லாது, போயும் போயும் இந்த பக்கத்து வீடு துக்காராம் அங்கிளுக்கு போய் பயப்பட வேண்டியதாய் போயிற்று. அதுவும் பெரிதாய் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய காரணம் ஒன்றும் கிடையாது.

இன்றும் முகக் கவசத்தை மறந்து விட்டேன்; அவ்வளவு தான்.

Continue reading “முகக்கவசம் ‍- சிறுகதை”

ஜோசியக்கிளி – சிறுகதை

ஜோசியக்கிளி

சியாமளாவும், ஷீலாவும் முன்னால் நடந்து செல்ல, அவர்கள் பின்னாலேயே கோபிநாத் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஷீலா அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமையாதலால் கடைவீதி முழுக்க சாம்பிராணியின் நறுமணம் மூக்கை துளைத்தது.

யானை ஒன்று, மணியோசையுடன் ஆடி அசைந்து வந்து ஒவ்வொரு கடைவாசலிலும் நின்று துதிக்கையை நீட்டியது.

Continue reading “ஜோசியக்கிளி – சிறுகதை”

பரதேசம் – சிறுகதை

பரதேசம்
பரதேசம் போவதுதான் ஒரே வழியென்றால் செய்து விட வேண்டியதுதான். ஒரு சில நாட்களாக அதே சிந்தனை. 

மாடுகள், உழவு நிலம், கிணறு, மனைவி, மகன், கண்ணுக்குட்டி, அந்த ஒற்றை பனை மரம், 12-ம் நம்பர் பஸ், கருப்பன் நாய், பால்காரம்மா, அய்யனார் எல்லாமே அவ்வபோது நினைவுக்கு வந்தது.

முக்கியமாக மகன், பதினெட்டு வயது. அவன்தான் சொன்னான்.

“எங்கேயாவது போயிரு..”

“சம்பத்து, உம் பேச்சே சரியில்லை.. “

Continue reading “பரதேசம் – சிறுகதை”

வாழ விடுங்கள் – சிறுகதை

வாழ விடுங்கள்

திருமாறன் இரண்டு நாட்கள் லீவில் திருச்சி வந்திருந்தான். தர்மபுரியில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணி புரிபவன். சொந்த ஊரும், மனைவியின் ஊரும் திருச்சியே.

திருமாறனின் பெற்றோர் ஸ்ரீரங்கத்திலும், அவன் மனைவியின் பெற்றோர் திருவெறும்பூரிலும் வசித்து வந்தனர். மனைவி பிறந்த வீடு வந்து பத்து நாட்களாகிறது. மனைவியைக் கூட்டிப் போவதற்காக வந்திருக்கிறான்.

Continue reading “வாழ விடுங்கள் – சிறுகதை”