புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை

கார்முகிலின் கருவண்ணம் கரைந்தே போனதே

கருவிழிக்கும் காணாமல் மறைந்தே சென்றதே

வெட்டுக்கிளியினை வேட்டையாடிடும்

ரெட்டைவாலினைக் காணவுமில்லையே

Continue reading “புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை”

தனிமையே நிஜம் ‍- கவிதை

பூக்களை சுற்றும் வண்டுகளைக் கேட்டுப்
பூப்பதில்லை செடிகள்

வாசமிழந்தால் வண்டுகள் பூக்களை வட்டமிடுவதில்லை
பூவுலகில் யார் அனுமதி கேட்டும் நீ பிறக்கவில்லை

Continue reading “தனிமையே நிஜம் ‍- கவிதை”

ஏழையின் மதிப்பு – சிறுகதை

ஏழையின் மதிப்பு

அன்று தெருவில் யாரும் வெளியே இல்லை.

‘இராயல் ஸ்டீரீட்’ என்னும் பணக்காரர்கள் வசிக்கும் அந்த தெருவில் அனைத்து வீட்டிலும் கறிக்குழம்பு மணமும், மீன்குழம்பின் வாச‌மும் தென்றலைப் போல அருமையாக வீசின.

ஞாயிற்றுக் கிழமை என்ற ஒருநாள் நம் மக்களுக்கு மிகப்பெரிய வரமான நாள்.

வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், இறைச்சி, மீன், காய்கனி, மளிகை கடைகளுக்கும் பொன்னான நாள். வாரத்தில் கிடைக்கும் அந்த ஒரு ஓய்வுநாள் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் கிடைக்காத பொக்கிஷம்.

Continue reading “ஏழையின் மதிப்பு – சிறுகதை”