பெரும்பாலான குடும்பங்களில் இன்று கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
பொருளாதார நிலைமையை உயர்த்தி, அதிக வசதிகளை வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பணம்! பணம்!! பணம்!!! அவர்களின் தாரக மந்திரமே பணம்தான்.
காலை ஆறு அல்லது ஏழு மணிக்கு வீட்டை விட்டுச் சென்றால், இரவு தாமதமாகத்தான் வீடு திரும்புகின்றனர்.