சீரக சாதம் / சீரா ரைஸ் செய்வது எப்படி?

சீரக சாதம் / சீரா ரைஸ்

சீரக சாதம் எளிதில் செய்யக்கூடிய எளிமையான கலவை சாதம் ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம்.

சீரகம் உடலின் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது. அத்தோடு செரிமானமும் நன்கு நடைபெற உதவுகிறது. எனவே இச்சாதத்தை அடிக்கடி செய்து உண்ணலாம்.

சீரக சாதம் தயார் செய்ய சாதாரண சாப்பாட்டு அரிசியையோ, சம்பா பிரியாணி அரிசியையோ அல்லது பாசுமதி அரிசியையோ பயன்படுத்தலாம்.

நான் சம்பா பிரியாணி அரிசியைப் பயன்படுத்தி சீரா ரைஸ் செய்துள்ளேன்.

Continue reading “சீரக சாதம் / சீரா ரைஸ் செய்வது எப்படி?”

திருஞானசம்பந்தர் நாயனார் – தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்

திருஞானசம்பந்தர் நாயனார்

திருஞானசம்பந்தர் நாயனார் தம்முடைய பதிகங்களின் மூலம் தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர். உமையம்மை இவருக்கு சிவஞானம் கலந்த ஞானப்பாலை ஊட்டியதால் மூன்று வயதிலேயே இறைவனைப் போற்றிப் பதிகம் பாடும் திறனைப் பெற்றவர்.

பதிகம் என்பது இறைவனைப் போற்றும் முதல் பத்து பாடல்களையும், அப்பாடல்களால் உண்டாகும் நன்மைகளை விளக்கும் இறுதிப் பாட்டையும் கொண்ட தொகுப்பு ஆகும்.

திருஞானசம்பந்தர் நாயனார் சைவ சமயக் குரவர்களில் முதன்மையானவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ சமயக் குரவர்களில் ஏனையோர் ஆவர்.

Continue reading “திருஞானசம்பந்தர் நாயனார் – தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்”

ஆசிரியர் தின வணக்கம்!

ஆசிரியர்

செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினம்.

ஏணியாய் இருந்து மாணவர்களை உயர்த்தும் அறப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அனைத்து ஆசிரியர்களையும் இனிது வணங்குகின்றது!

பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20

பொதுக் கரைப்பான்- நீருடன் ஓர் உரையாடல்- 20

சில எலுமிச்சை பழங்கள் இருந்தன. அவற்றுள் இரண்டு மிகவும் பழுத்திருந்தன. ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் புள்ளிகளும் இருந்தன. அப்படியே வைத்திருந்தால், அவை அழுகிவிடும்.

“என்ன செய்யலாம், எலுமிச்சை சாதம் செய்யலாமா?” என்று யோசித்தேன். ஆனால், காலையில் சமைத்திருந்த சாம்பார் அதிகமாகவே இருக்கிறது. ‘சாம்பார் வீணாயிடுமே?’ என்றும் தோன்றியது.

‘சரி சாறு போட்டிடலாம்’ என்று முடிவு செய்தேன்.

Continue reading “பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20”