நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19

நீரின் ஒட்டுந்தன்மை - நீருடன் ஓர் உரையாடல் - 19

அதிகாலை பொழுது. சுமார் ஆறு மணி இருக்கும். மாடிக்கு வந்தேன்.

காலநிலை குளிர்ச்சியாக இருந்தது. சூரியக் கதிர்கள் இன்னமும் பூமியை வந்தடையவில்லை. ஆனால் வெளிச்சம் இருந்தது.

அங்கிருந்த பூச்செடிகளை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். செடியின் இலைகளில் நீர்த்திவலைகள் ஆங்காங்கே இருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தேன்.

ஒரு இலையின் முனையில் கோள வடிவில் நீர் துளி ஒன்று ஒட்டியபடி, புவி ஈர்ப்புவிசையை எதிர்த்து கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தது. இயற்கையின் இந்த நுட்பமான அறிவியலை எண்ணி வியந்தேன்.

அப்பொழுது நீருடன் பேச விரும்பினேன். பேச்சை நாமே தொடங்குவோமே என்று தேன்றியது.

உடனே “பாத்து… பத்திரம்… இலையில இருந்து கீழ விழுந்திடப் போற‌” என்று அந்த நீர்த்திவலையைப் பார்த்துக் கூறினேன்.

Continue reading “நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19”

House Wife குறும்படம் விமர்சனம்

House Wife குறும்படம் விமர்சனம்

House Wife குறும்படம், நமது நாட்டில் பெண் பெறவேண்டிய சுதந்திரம் குறித்து நெற்றியில் அடித்தாற் போல் கூறுகிறது.

பழமைவாதம், கௌரவம், பெண் அடிமை, உரிமைக்கான போராட்டம் எனக் கதை பெரும் வளையத்திற்குள் நீண்ட அம்சங்களை அலசி ஆராய்கிறது.

காலத்தின் இடைவெளி, இரு முனைகளான மாமியார் மருமகளை வேறு வேறாக உருவாக்குவதைக் கதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.

ஒரு எதார்த்தமான வாழ்க்கை முறை அப்படியே பிசகாமல் இக்குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

Continue reading “House Wife குறும்படம் விமர்சனம்”

ஓலா – சிறுகதை

ஓலா - சிறுகதை

பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு அதிகாலை திருமணம்.

சென்னையிலிருந்து எப்படியாவது போயே ஆகவேண்டும், இல்லையேல் சுனாமி வந்து விடும். ஏற்கனவே எங்கள் உறவு என்கிற ஓஸோனில் ஓட்டை விழுந்து கிடக்கிறது .

அலுவலகத்தில் ஒரு நாள் விடுப்பு கேட்டால் பூகம்பம் வெடிக்கும். நான் இல்லையென்றால் அலுவலகமே ஸ்தம்பித்து விடும் என்கிறார்கள்.

மனைவியை மட்டும் அனுப்பி வைக்கலாம் என்றால், கொரோனாவால் பஸ் போக்குவரத்தும் இல்லை.

“ஓலா அவுட் ஸ்டேஷன் டாக்ஸி புக் செய்து தருகிறேன். நீ மட்டும் போய் வா.” என்று சொன்னதனால் ஏற்பட்ட சண்டை, சீன எல்லையான கள்வான் பள்ளத்தாக்கில் நடந்ததை விட மோசமாக இருந்தது.

“அதிகாலை 3 மணிக்கு யாருன்னே தெரியாத ஓலா டிரைவரை நம்பி என்னை அனுப்பி வைக்க நினைக்கிறீங்களே. நாட்டு நடப்பு எதாவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” என்று அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் டாப் கிளாஸ். தலைமை நீதிபதியே இவ கிட்ட நிறைய கத்துக்கனும்.

Continue reading “ஓலா – சிறுகதை”

நம் இராமானுசர் – ஓர் பார்வை

நம் இராமானுசர் - ஓர் பார்வை

‘பொங்கிலங்கும் முப்புரி நூலோடு பாங்கெனப் பேசும் பொன் இவர் மேனி’ என்னும் படியாக, வடிவழகும் நடையழகும் கொண்ட பைந்துவராடைப் பேராசான் நம் இராமாநுசர்.

இக்காரேய் கருணை இராமாநுசரே பாமரரும் பேதையரும் பேருருவப் பெருமானை அறிந்து, புரிந்து, ஏற்று வணங்கிப் பேரருள் பெற்றிடப் பெரும் காரணராவார்.

காஞ்சி பெரிய பெருமானிடம் நித்தம் பேசும் திருக்கச்சி நம்பிகளிடம் பெரும் பக்தி கொண்டவர்.

Continue reading “நம் இராமானுசர் – ஓர் பார்வை”

தட்டான் – பூச்சிகளின் தேவதை

தட்டான்

தட்டான் பூச்சிகளின் தேவதை என்று சூழியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓர் இடத்தில் தட்டான் பூச்சியைப் பார்த்தால், அவ்விடத்தில் சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நாம் வாழும் இப்பூமியில் நம்முடைய சூழல் அமைப்பு அழகானது மற்றும் அவசியமானதும் கூட.

சூழியல் என்பது ஒரு உயிரினத்தின் வாழிடத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரற்ற பொருட்களை உள்ளடக்கியது.

எந்த ஒரு உயிரினமும் சூழலியலில் உள்ள மற்றவற்றுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி.

ஆதலால் மனிதனின் செயல்பாடுகளினால் சூழலில் உள்ள ஏதேனும் ஓர் உயிரினம் எண்ணிக்கையில் குறையும் போதோ, முற்றிலும் அழிய நேரும் போதோ, அது சூழியலுக்கும் அதில் உள்ள ஏனைய உயிரினங்களுக்கும் சரி செய்ய முடியாத பாதிப்பினை விளைவிக்கிறது.

Continue reading “தட்டான் – பூச்சிகளின் தேவதை”