மனசுக்குள் நாய‌னச் சத்தம் – சிறுகதை

மனசுக்குள் நயனச் சத்தம்

“லைட்டைக் கூட போடாம இருட்ல உட்கார்ந்துக்கிட்டு என்னடீ பண்றே?”

அம்மாவின் குரல் கேட்டதும் தான் சுயநினைவுக்கே வந்தேன்.

மணியைப் பார்த்தேன். இரவு மணி ஏழு. கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாக பிரமை பிடித்த நிலையில் உட்கார்ந்திருக்கிறேன். சுற்றுசூழல் மறந்து இருந்திருக்கிறேன்.

அம்மா சுவிட்சைத் தட்டியதும் இருட்டு மாயமாய் மறைந்து, அறை முழுக்க வெளிச்சம். ஆனால் என் உள்ளம் முழுக்கப் பரவியிருக்கும் இருட்டு எப்போது மறையும்?

Continue reading “மனசுக்குள் நாய‌னச் சத்தம் – சிறுகதை”

ரவா உப்புமா – சிறுகதை

ரவா உப்புமா

நாலுபக்கமும் களிமண்ணாலான சுவர். அதற்கு மேலே தென்னங்கீற்றாலான கூரை, அடுப்பங்கரைக்கு மட்டும், இரு கீற்று மறைப்பு, இதுதான் எங்கள் வீடு.

குளியலறை வீட்டுக்கு அருகிலேயே ஓடிய அரசலாறு. டாய்லெட் – அரசலாற்றின் ஓரம் உள்ள, செடி கொடிகள் மரங்கள் நிறைந்த காட்டுக் கரை.

டாய்லெட் நேரம் ஆண்கள் காலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள். பெண்கள் மாலை 6.30 மணிக்கு மேல் 7.30-க்குள்.

மேலும் லக்னம், ராசி எல்லாம் அவரவர் இஷ்டம். ஏனெனில் இருட்டு நேரத்தில் பாம்பு, பூச்சிகள் போன்றவற்றால் பின்னால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அவரவர்கள்தான் பொறுப்பு.

Continue reading “ரவா உப்புமா – சிறுகதை”

நிச்சயமான நிஜங்கள் – கவிதை

எல்லாவற்றையும் நான் பார்ப்பதால்

அதற்கு மேல் எனக்கு

எந்த தகுதியும் இல்லை.

அந்த எல்லாமும்

ஒரே மாதிரியாக 

வெவ்வேறாக இருப்பதால்

Continue reading “நிச்சயமான நிஜங்கள் – கவிதை”