வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13

வாலைவடி நீர்

வாலைவடி நீர் பயன்படுத்தினா தான் அந்த வேதிவினை சரியா நிகழும்” என்று கூறினேன்.

“சரிடா, நான் அந்த வேதிவினையை செஞ்சி பாத்துட்டு உனக்கு சொல்றேன்” என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்தான் நண்பன்.

ஆம், எனது நண்பனுடன் இரும்பு ஆக்சைடு நானோ துகள்களை தயாரிப்பதற்கான வழிமுறைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது தண்ணி லாரி வரும் சத்தம் கேட்டது.

Continue reading “வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13”

காடே கதை கூறு குறும்படம் விமர்சனம்

காடே கதை கூறு

காடே கதை கூறு குறும்படம் காட்டை மையம் கொண்ட அரசியல் படம்.

பணத்திற்கும் பணமற்றவைக்கும் இடையில் நடக்கும் போராட்டம்.

காட்சி ஒன்று. உள் நடப்பவைகளும் வெளிப்பாடுகளும் வேறு வேறு. அந்த அரசியல் பொதுமக்களுக்குத் தெரிவதேயில்லை.

மனதை அதள பாதாளத்திற்குள் கொண்டு சென்று அழுத்துவது போன்ற பிரமை. கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கும் சோகம்.

வலி, வேதனை, இயலாமை, துயர், அத்தனையையும் ஒட்டு மொத்தக் காட்சிகளிலும் அள்ளித் தெளித்திருப்பது மனதை ஏதோ செய்கிறது… உள்ஊடுறுவி திடுக்கிட வைக்கிறது.

Continue reading “காடே கதை கூறு குறும்படம் விமர்சனம்”

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் என்ற‌ நூல் திரு.சி. இராமமூர்த்தி இராமாநுஜதாசன் அவர்களால் மே மாதம்-2021 ல் வெளியிடப்பட்ட அற்புதமான நூல் ஆகும்.

அற்புதமான ஆழ்வாரான நம்மாழ்வாரின் இலக்கிய நயங்களையும், வைணவச் சமயம் சார்ந்த இறையாண்மைக் கருத்துக்களையும் பன்னூல் புலமையோடு ஒப்பிட்டும், உவமித்தும் எழுதப்பட்டது இந்நூல்.

ஆன்மீகம் ஒரு மாபெரும் பிரமாண்டம். அதை இன்னும் யாரும் முழுதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நுழைவதற்கான பல வழிகளில் இந்த நூலும் ஒன்று எனலாம்.

Continue reading “நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை”