நெய் கடலை அருமையான சிற்றுண்டி வகை ஆகும். இதனை மாலை நேரங்களில் தேநீருடன் ருசிக்கலாம். கடலைப் பருப்பினைக் கொண்டு செய்யப்படுவதால் இது பசி தாங்கும். வீட்டில் இதனை தயார் செய்வது ஆரோக்கியமானதும் கூட.
இதனைத் தயார் செய்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இனி சுவையான நெய் கடலை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.