கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை

கடிகாரம் வாங்கவில்லை

எங்கள் சொந்த ஊரில் உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் பூ மிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

வெகுவிமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் பதினைந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் ‘பூ மிதி’ திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

மூன்றாம் நாள் திருவிழாவில் காலை மூன்று மணி முதலே பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு துவங்கும்.

Continue reading “கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை”

ரம்மியம் – சிறுகதை

ரம்மியம்

ரம்யா இல்லாத வீடு செறிச்சோடி இருந்தது. சுவர்க் கடிகாரம் காலை எட்டு மணியைப் பிரகனப்படுத்தியது. அன்று ஞாயிற்றுக் கிழமை.

அப்போதுதான் சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான் கிருஷ்ணன். சூடாக காபி சாப்பிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

ரம்யா இருந்திருந்தால் சூடாக காபி என்ன? கூடவே ஏதாவது டிபனும் கொடுத்திருப்பாள்.

நேற்று மாலைதான் குழந்தை அருணை அழைத்துக் கொண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் பிறந்த வீட்டிற்கு சேலம் சென்றிருக்கிறாள்.

இனி அருணுக்குப் பள்ளி திறக்கும் சமயம்தான் வருவாள். அருணின் பள்ளி திறக்க இன்னும் இரு வாரங்கள் உள்ளன.

Continue reading “ரம்மியம் – சிறுகதை”

ஒரு வழிப் பாதை – சிறுகதை

ஒரு வழிப் பாதை

அன்று காலை ஊழியர் ஒருவரின் பென்ஷன் சம்பந்தப்பட்ட விவரம் ஒன்றைப் பெறுவதற்காக அக்கவுண்ட்ஸ் பிரிவிற்குச் சென்றான் தெய்வசிகாமணி.

அச்சமயம் வழக்கமான புன்முறுவலுடன் தன்னிடம் பர்சனலாகப் பேசவேண்டும் எனக் காஷியர் லோகநாயகி சொன்னபோது, அது தன் திருமணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை அவன்.

அலுவலகக் கேண்டீனில் காலை பதினொன்றரை மணியளவில் ஒதுக்குப்புறமாய் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது லோகநாயகி வந்து விஷயத்தைக் கூறினாள்.

Continue reading “ஒரு வழிப் பாதை – சிறுகதை”

தாய்மை – சிறுகதை

தாய்மை

“என்ன நித்யா முகம் வாடியிருக்கு?”. நளினி இப்படிக் கேட்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் யாவும் கண்களில் கண்ணீராய் முட்டிக் கொண்டு நிற்க, நித்யாவின் பார்வை மங்கலாயிற்று.

நளினியால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. வனிதா வார்த்தை அம்புகளை எய்திருப்பாள். முழு விவரமறிய மீண்டும் கேட்டாள்.

“வனிதா ஏதாவது சொன்னாளா?”

“அவ கிடக்கிறா. மனதைப் போட்டுக் குழப்பிக்காதே.”

Continue reading “தாய்மை – சிறுகதை”

இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

இனிக்கும் புளியம்பழம்

 நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். 

அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
    
அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது. 

Continue reading “இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை”