ஒரு வழிப் பாதை – சிறுகதை

ஒரு வழிப் பாதை

அன்று காலை ஊழியர் ஒருவரின் பென்ஷன் சம்பந்தப்பட்ட விவரம் ஒன்றைப் பெறுவதற்காக அக்கவுண்ட்ஸ் பிரிவிற்குச் சென்றான் தெய்வசிகாமணி.

அச்சமயம் வழக்கமான புன்முறுவலுடன் தன்னிடம் பர்சனலாகப் பேசவேண்டும் எனக் காஷியர் லோகநாயகி சொன்னபோது, அது தன் திருமணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை அவன்.

அலுவலகக் கேண்டீனில் காலை பதினொன்றரை மணியளவில் ஒதுக்குப்புறமாய் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது லோகநாயகி வந்து விஷயத்தைக் கூறினாள்.

Continue reading “ஒரு வழிப் பாதை – சிறுகதை”

அட்மிஷன் – சிறுகதை

அட்மிஷன்

அட்மிஷன் போடுவதற்கு, ஃபைலில் மலை போல் குவிந்து கிடந்த விண்ணப்ப படிவங்களைப் பரிசீலனை செய்யத் தயாரானார் வெங்கடேஸ்வரன்.

அவரது பெயருக்குக் கீழே ‘ஹெட்மாஸ்டர்’ என்று பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று டேபிளில் அவர் முன் காட்சியளித்தது.

ஏதோ கேட்பதற்காகக் காலிங் பெல்லை அழுத்தி பியூனை அழைத்தபோது டேபிளை அலங்கரித்த போன் இவரை அழைத்தது.

ரிசீவரை எடுத்துக் காதில் வைத்த போது எதிர்முனையில் “இஸ் மிஸ்டர் வெங்கடேஸ்வரன் அவைலபிள்?” என்றதோர் குரல் கேட்டது.

Continue reading “அட்மிஷன் – சிறுகதை”

தாய்மை – சிறுகதை

தாய்மை

“என்ன நித்யா முகம் வாடியிருக்கு?”. நளினி இப்படிக் கேட்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் யாவும் கண்களில் கண்ணீராய் முட்டிக் கொண்டு நிற்க, நித்யாவின் பார்வை மங்கலாயிற்று.

நளினியால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. வனிதா வார்த்தை அம்புகளை எய்திருப்பாள். முழு விவரமறிய மீண்டும் கேட்டாள்.

“வனிதா ஏதாவது சொன்னாளா?”

“அவ கிடக்கிறா. மனதைப் போட்டுக் குழப்பிக்காதே.”

Continue reading “தாய்மை – சிறுகதை”