Tag: ஜானகி எஸ்.ராஜ்

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் (Ministry of Education, Govt. of India) இயங்கும் “கேந்திரிய வித்யாலயா”- 1, திருச்சி பள்ளியில் 41 ஆண்டுகள் (1969 -.2010) வேதியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அனைத்து மாத இதழ்களிலும், மாதமிருமுறை மற்றும் நாளிதழ்களிலும் இவரது கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள், நேர் காணல், சமூகத்தில் காணப்படும் பிரச்னைகள், குறைகள் போன்றவைகள் இடம் பெற்று வருகின்றன.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற பிரச்னைகள் மற்றும் குறைகளுக்குத் தீர்வுகளும் கிடைத்திருக்கின்றன.

ஆனந்த விகடன், கல்கி, கோகுலம் (ஆங்கிலம், தமிழ்) இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கையர் மலர், மங்கை, தங்க மங்கை, பெண்மணி, சாவி, குமுதம். வாசுகி, தாய், சுபமங்களா, பாக்யா, தேவி, ராஜம், சிறுகதைக் கதிர், முத்தாரம், கல்கண்டு, ஐஸ்வர்யா, உரத்த சிந்தனை, “இனிது”- இணைய இதழ் போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் பல பிரசுரமாகியிருக்கின்றன / பிரசுரமாகி வருகின்றன.

தினமலர், தினத்தந்தி, .தினமணி, தினபூமி, THE HINDU, மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு போன்ற நாளிதழ்களில் தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருபவர்களில் இவரும் ஒருவர். கதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், ஜோக்குகள் என இவரது பல படைப்புகள் பரிசுகளும் பெற்றிருக்கின்றன.

1986 – ல் எழுத்துலகில் அறிமுகமாகி இன்று வரை பல்வேறு பத்திரிக்கைகளில் இவர் தொடர்ந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது!

  • வாழ விடுங்கள் – சிறுகதை

    வாழ விடுங்கள் – சிறுகதை

    திருமாறன் இரண்டு நாட்கள் லீவில் திருச்சி வந்திருந்தான். தர்மபுரியில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணி புரிபவன். சொந்த ஊரும், மனைவியின் ஊரும் திருச்சியே.

    திருமாறனின் பெற்றோர் ஸ்ரீரங்கத்திலும், அவன் மனைவியின் பெற்றோர் திருவெறும்பூரிலும் வசித்து வந்தனர். மனைவி பிறந்த வீடு வந்து பத்து நாட்களாகிறது. மனைவியைக் கூட்டிப் போவதற்காக வந்திருக்கிறான்.

    (மேலும்…)
  • துணை – சிறுகதை

    துணை – சிறுகதை

    மழை பெய்து ஓய்ந்தாற் போல் அமைதியாக இருந்தது வீடு.

    சென்ற ஒரு மாத காலமாக மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலை இன்று காலை முதல் மாறி விட்டிருந்தது.

    அவர்களை வைகை எக்ஸ்பிரஸில் சென்னை அனுப்பிவிட்டு வீடு திரும்பிய சுப்பிரமணியன் தளர்ச்சியுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தார்.

    அவர் வந்ததை அறிந்த விசாலாட்சி ‘பூஸ்ட்’ கலந்து எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள்.

    அதை வாங்கி அருகிலிருந்த டீபாய் மீது வைத்த சுப்பிரமணியன் விசாலாட்சியை உற்று நோக்கினார்.

    (மேலும்…)
  • பெருந்தன்மை – சிறுகதை

    பெருந்தன்மை – சிறுகதை

    காலை 8 மணிக்கே ஆட்கள் வேலைக்கு வந்து விட்டார்கள். மார்பிள் பாலிஷ் போடுகிறவர், உதவியாளர் மற்றும் சித்தாளாக ஒரு பெண்.

    குளிக்க கிளம்பிய மருதநாயகம் மாடி வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு, வந்திருந்தவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

    பாலிஷ் போடுகிறவர் சொன்னார். “சார், இன்று அதிகபட்ச வேலை முடிந்து விடும். இந்த சித்தாளுக்கு நாளை வேறு ஒரு வேலை இருக்கு. அதனால் இவங்க அக்கா நாளை சித்தாள் வேலைக்கு வருவாங்க.” என்றவர் பாலிஷ் மெஷினை ஓட்ட ஆரம்பித்தார்.

    (மேலும்…)
  • அழகு நிலா – சிறுகதை

    அழகு நிலா – சிறுகதை

    மாட்டுத் தொழுத்தில் கட்டியிருந்த பசுமாடு நிமிடத்திற்கு ஒருமுறை அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தது. ஈன்று ஓரிரு மாதங்களே ஆகியிருந்தது.

    கன்றுக் குட்டியை அதன் அருகிலேயே சற்றுத் தள்ளிக் கட்டியிருந்தார்கள். இருந்த இடத்திலிருந்து நகர முடியாமல் கன்றுக் குட்டியும் பசுவின் குரலுக்கு எதிர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

    புழக்கடை பக்க கதவைத் திறந்து கொண்டு தொழுவத்திற்குள் வந்தார் பார்த்தசாரதி – மோகனின் தந்தை. அதிகாலை நேரம், பசுமாட்டின் அருகில் வந்தவர் அதைத் தட்டிக் கொடுத்து முதுகைத் தடவினார்.

    (மேலும்…)
  • தவப்புதல்வன் – சிறுகதை

    தவப்புதல்வன் – சிறுகதை

    தவப்புதல்வன் ஓர் அருமையான சிறுகதை.

    காவிரிப் பாலம் தான் திருச்சியின் பீச்.

    காவிரி கரை புரண்டு ஓடாவிட்டாலும், பாலச்சுவரைப் பிடித்துக் கொண்டு, மாலை நேர இதமான காற்றின் சுகத்தை அனுபவித்தவாறே மணிக்கணக்கில் காவிரியைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விடுவது, மக்களின் பொழுது போக்கு அம்சமாகி விட்டது.

    பல்வேறு சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள், செயல்கள் மூலம் ஏற்படும் ஒருவிதமான இறுக்கத்தை மாலை வேளையில் காவிரித் தாயின் திருவடிகளில் இறக்கி வைத்து விட்டுச் செல்வதில் மக்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி.

    (மேலும்…)