Tag: ஜானகி எஸ்.ராஜ்

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் (Ministry of Education, Govt. of India) இயங்கும் “கேந்திரிய வித்யாலயா”- 1, திருச்சி பள்ளியில் 41 ஆண்டுகள் (1969 -.2010) வேதியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அனைத்து மாத இதழ்களிலும், மாதமிருமுறை மற்றும் நாளிதழ்களிலும் இவரது கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள், நேர் காணல், சமூகத்தில் காணப்படும் பிரச்னைகள், குறைகள் போன்றவைகள் இடம் பெற்று வருகின்றன.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற பிரச்னைகள் மற்றும் குறைகளுக்குத் தீர்வுகளும் கிடைத்திருக்கின்றன.

ஆனந்த விகடன், கல்கி, கோகுலம் (ஆங்கிலம், தமிழ்) இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கையர் மலர், மங்கை, தங்க மங்கை, பெண்மணி, சாவி, குமுதம். வாசுகி, தாய், சுபமங்களா, பாக்யா, தேவி, ராஜம், சிறுகதைக் கதிர், முத்தாரம், கல்கண்டு, ஐஸ்வர்யா, உரத்த சிந்தனை, “இனிது”- இணைய இதழ் போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் பல பிரசுரமாகியிருக்கின்றன / பிரசுரமாகி வருகின்றன.

தினமலர், தினத்தந்தி, .தினமணி, தினபூமி, THE HINDU, மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு போன்ற நாளிதழ்களில் தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருபவர்களில் இவரும் ஒருவர். கதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், ஜோக்குகள் என இவரது பல படைப்புகள் பரிசுகளும் பெற்றிருக்கின்றன.

1986 – ல் எழுத்துலகில் அறிமுகமாகி இன்று வரை பல்வேறு பத்திரிக்கைகளில் இவர் தொடர்ந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது!

  • பேசுவது கிளியா? – சிறுகதை

    பேசுவது கிளியா? – சிறுகதை

    துர்காவிற்கு நாளை மறுநாள் பிறந்த நாளாம். எதிர்வீட்டிற்கு இரு மாதங்களுக்கு முன் தான் குடிவந்திருந்தார்கள்.

    தான் தங்கியிருக்கும் மாடிப் போர்ஷனிலிருந்து காலை வேளையில் நியூஸ் பேப்பர் படிக்கிற சாக்கில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் துர்காவை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கும் வழக்கம் சென்ற ஒரு மாத காலமாக பாலனிடம் ஏற்பட்டிருந்தது.

    வாசலில் கோலமிட வருவாள். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் தான். அதற்குள் உள்ளே சென்று விடுவாள். அதன் பின் அவளைப் பார்க்க முடியாது. பிரம்மதேவன் படைப்பில் அவள் ஒரு வித்தியாசமான படைப்பு.

    (மேலும்…)
  • டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை

    டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை

    அந்தக் க்ளினிக் வாசலில் ரவியை நிற்க வைத்துவிட்டு, ‘இதோ அரை மணியில் வந்துவிடுகிறேன்’ என்று ஆண்டாள் தெரு வரை சென்ற பரசுராமனை இன்னும் காணவில்லை! அவன் சென்று அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான் ரவி. மணி ஆறரை.

    நந்தி கோயில் மாலை நேர நெரிசலுடன் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. பச்சைப்பசேல் காய்கறிகளைப் பார்த்து மயங்கிப் பையில் நிரப்பிக் கொண்டாகிவிட்டது.

    (மேலும்…)
  • மனசுக்குள் நாய‌னச் சத்தம் – சிறுகதை

    மனசுக்குள் நாய‌னச் சத்தம் – சிறுகதை

    “லைட்டைக் கூட போடாம இருட்ல உட்கார்ந்துக்கிட்டு என்னடீ பண்றே?”

    அம்மாவின் குரல் கேட்டதும் தான் சுயநினைவுக்கே வந்தேன்.

    மணியைப் பார்த்தேன். இரவு மணி ஏழு. கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாக பிரமை பிடித்த நிலையில் உட்கார்ந்திருக்கிறேன். சுற்றுசூழல் மறந்து இருந்திருக்கிறேன்.

    அம்மா சுவிட்சைத் தட்டியதும் இருட்டு மாயமாய் மறைந்து, அறை முழுக்க வெளிச்சம். ஆனால் என் உள்ளம் முழுக்கப் பரவியிருக்கும் இருட்டு எப்போது மறையும்?

    (மேலும்…)
  • கதை கதையாம் காரணமாம் – சிறுகதை

    கதை கதையாம் காரணமாம் – சிறுகதை

    பள்ளியில் ஆண்டு மலர் தயாரித்து வெளியிடப் போகிறார்களாம்.

    மாணவர்களின் பங்கு அதில் நிறையவே இடம் பெற வேண்டும் என்றும், ஆண்டு மலருக்கான கதைகள், கட்டுரைகள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கை வந்தது.

    தன் எழுத்தாற்றலைக் காண்பிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருப்பது கண்டு சரவணனின் மனம் சிறகடித்துப் பறந்தது.

    என்ன எழுதுவது? கதையா? கவிதையா? கட்டுரையா? ஜோக்கா? அல்லது புதிரா?.

    (மேலும்…)
  • ஜோசியக்கிளி – சிறுகதை

    ஜோசியக்கிளி – சிறுகதை

    சியாமளாவும், ஷீலாவும் முன்னால் நடந்து செல்ல, அவர்கள் பின்னாலேயே கோபிநாத் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

    ஷீலா அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தாள்.

    அன்று வெள்ளிக்கிழமையாதலால் கடைவீதி முழுக்க சாம்பிராணியின் நறுமணம் மூக்கை துளைத்தது.

    யானை ஒன்று, மணியோசையுடன் ஆடி அசைந்து வந்து ஒவ்வொரு கடைவாசலிலும் நின்று துதிக்கையை நீட்டியது.

    (மேலும்…)