கதை கதையாம் காரணமாம் – சிறுகதை

கதை கதையாம் காரணமாம்

பள்ளியில் ஆண்டு மலர் தயாரித்து வெளியிடப் போகிறார்களாம்.

மாணவர்களின் பங்கு அதில் நிறையவே இடம் பெற வேண்டும் என்றும், ஆண்டு மலருக்கான கதைகள், கட்டுரைகள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கை வந்தது.

தன் எழுத்தாற்றலைக் காண்பிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருப்பது கண்டு சரவணனின் மனம் சிறகடித்துப் பறந்தது.

என்ன எழுதுவது? கதையா? கவிதையா? கட்டுரையா? ஜோக்கா? அல்லது புதிரா?.

Continue reading “கதை கதையாம் காரணமாம் – சிறுகதை”

ஜோசியக்கிளி – சிறுகதை

ஜோசியக்கிளி

சியாமளாவும், ஷீலாவும் முன்னால் நடந்து செல்ல, அவர்கள் பின்னாலேயே கோபிநாத் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஷீலா அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமையாதலால் கடைவீதி முழுக்க சாம்பிராணியின் நறுமணம் மூக்கை துளைத்தது.

யானை ஒன்று, மணியோசையுடன் ஆடி அசைந்து வந்து ஒவ்வொரு கடைவாசலிலும் நின்று துதிக்கையை நீட்டியது.

Continue reading “ஜோசியக்கிளி – சிறுகதை”

வாழ விடுங்கள் – சிறுகதை

வாழ விடுங்கள்

திருமாறன் இரண்டு நாட்கள் லீவில் திருச்சி வந்திருந்தான். தர்மபுரியில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணி புரிபவன். சொந்த ஊரும், மனைவியின் ஊரும் திருச்சியே.

திருமாறனின் பெற்றோர் ஸ்ரீரங்கத்திலும், அவன் மனைவியின் பெற்றோர் திருவெறும்பூரிலும் வசித்து வந்தனர். மனைவி பிறந்த வீடு வந்து பத்து நாட்களாகிறது. மனைவியைக் கூட்டிப் போவதற்காக வந்திருக்கிறான்.

Continue reading “வாழ விடுங்கள் – சிறுகதை”

துணை – சிறுகதை

துணை

மழை பெய்து ஓய்ந்தாற் போல் அமைதியாக இருந்தது வீடு.

சென்ற ஒரு மாத காலமாக மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலை இன்று காலை முதல் மாறி விட்டிருந்தது.

அவர்களை வைகை எக்ஸ்பிரஸில் சென்னை அனுப்பிவிட்டு வீடு திரும்பிய சுப்பிரமணியன் தளர்ச்சியுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தார்.

அவர் வந்ததை அறிந்த விசாலாட்சி ‘பூஸ்ட்’ கலந்து எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள்.

அதை வாங்கி அருகிலிருந்த டீபாய் மீது வைத்த சுப்பிரமணியன் விசாலாட்சியை உற்று நோக்கினார்.

Continue reading “துணை – சிறுகதை”

பெருந்தன்மை – சிறுகதை

பெருந்தன்மை

காலை 8 மணிக்கே ஆட்கள் வேலைக்கு வந்து விட்டார்கள். மார்பிள் பாலிஷ் போடுகிறவர், உதவியாளர் மற்றும் சித்தாளாக ஒரு பெண்.

குளிக்க கிளம்பிய மருதநாயகம் மாடி வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு, வந்திருந்தவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

பாலிஷ் போடுகிறவர் சொன்னார். “சார், இன்று அதிகபட்ச வேலை முடிந்து விடும். இந்த சித்தாளுக்கு நாளை வேறு ஒரு வேலை இருக்கு. அதனால் இவங்க அக்கா நாளை சித்தாள் வேலைக்கு வருவாங்க.” என்றவர் பாலிஷ் மெஷினை ஓட்ட ஆரம்பித்தார்.

Continue reading “பெருந்தன்மை – சிறுகதை”