அருவி
தன்னைத் தழுவிக்
கொண்டிருக்கும் மலையை
வானமவள் முத்தமிட்டாள்
Continue reading “அருவி – கவிதை”இணைய இதழ்
காமப்பாழி குறும்படம், திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாத தம்பதியினர் அடையும் பிரச்சனைகள் பற்றியது.
நடு நடுங்க வைக்கும், பதைபதைக்க வைக்கும், தீராது மலைக்க வைக்கும் உணர்வுகள் என்று சில உண்டு. அதில் ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறது இக்குறும்படம்.
குழந்தைக்காக ஏங்கும் ஒரு குடும்பத்தினரின் மன ஓட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கின்றனர்.
Continue reading “காமப்பாழி குறும்படம் விமர்சனம்”மார்க்கெட்டில் நுழைந்த மாணிக்கவேலு ஏதேச்சையாய் திரும்பியபோது தேங்காய் வாங்கிக் கொண்டிருந்த ராமநாதனைப் பார்த்துவிட்டார்.
வழக்கமாய் காணப்படும் உற்சாகம் அவர் முகத்தில் இல்லை. வாட்டமுடன் அவர் காணப்படுவதைக் கண்டு குழம்பினார் மாணிக்கவேலு.
நேற்று அவர் பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் ஏடாகூடமாக ஏதாவது சொல்லிவிட்டுப் போயிருப்பார்களோ?
Continue reading “நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – சிறுகதை”ஒரு ரோஜாவை
உனக்கு தருவதற்காக
கையில் பிடித்தபடி
காத்திருக்கிறேன்.
துர்காவிற்கு நாளை மறுநாள் பிறந்த நாளாம். எதிர்வீட்டிற்கு இரு மாதங்களுக்கு முன் தான் குடிவந்திருந்தார்கள்.
தான் தங்கியிருக்கும் மாடிப் போர்ஷனிலிருந்து காலை வேளையில் நியூஸ் பேப்பர் படிக்கிற சாக்கில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் துர்காவை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கும் வழக்கம் சென்ற ஒரு மாத காலமாக பாலனிடம் ஏற்பட்டிருந்தது.
வாசலில் கோலமிட வருவாள். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் தான். அதற்குள் உள்ளே சென்று விடுவாள். அதன் பின் அவளைப் பார்க்க முடியாது. பிரம்மதேவன் படைப்பில் அவள் ஒரு வித்தியாசமான படைப்பு.
Continue reading “பேசுவது கிளியா? – சிறுகதை”