நெல்லிக்காய் – மருத்துவ பயன்கள்

நெல்லக்காய்

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். Continue reading “நெல்லிக்காய் – மருத்துவ பயன்கள்”

நெருஞ்சில் – மருத்துவ பயன்கள்

நெருஞ்சில்

நெருஞ்சில் முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; காமம் பெருக்கும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; ஆண்மையைப் பெருக்கும்; இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும். Continue reading “நெருஞ்சில் – மருத்துவ பயன்கள்”

நாயுருவி – மருத்துவ பயன்கள்

நாயுருவி

நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். Continue reading “நாயுருவி – மருத்துவ பயன்கள்”

நன்னாரி – மருத்துவ பயன்கள்

நன்னாரி

நன்னாரி வேர் இனிப்பும், சிறு கசப்பும் சேர்ந்த சுவையானது. குளிர்ச்சியான தன்மை கொண்டது. வியர்வை, சிறுநீர் ஆகியவற்றைப் பெருக்கும்; தாது வெப்பத்தை அகற்றும்; உடலைத் தேற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; வண்டு கடி, நீரழிவு, கிரந்தி, காய்ச்சல் போன்றவற்றையும் குணமாக்கும். Continue reading “நன்னாரி – மருத்துவ பயன்கள்”

நந்தியாவட்டை – மருத்துவ பயன்கள்

நந்தியாவட்டை

நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.

Continue reading “நந்தியாவட்டை – மருத்துவ பயன்கள்”