புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

புள்ளின் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் என்ற பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் ஆறாவது பாசுரம் ஆகும்.

உறக்கத்தில் இருக்கும் பெண், திருமாலின் பெருமைகளைக் கேட்டு, குளிர்ந்த உள்ளத்துடன் எழுவதற்காக பாடப்படும் பாசுரம் இது.

பாம்பணையில் பள்ளி கொண்டு, முனிவர்களாலும் யோகிகளாலும் போற்றப்படும், அரி எனப்படும் திருமாலின் பெயரினைக் கேட்டு உள்ளம் குளிர, பாவையை அழைக்கும் பைந்தமிழ் பாசுரம்.

Continue reading “புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்”

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற பாடல் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் ஆகும்.

உலகினைக் காக்கும் கடவுளான திருமாலின் திருப்பெயர்களைக் கூறிக் கொண்டிருந்தால் நம்முடைய பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல பொசுங்கி விடும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

Continue reading “மாயனை மன்னு வடமதுரை மைந்தனை”

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் என்ற பாடல் அரங்கனிடம் மாறாத பக்தி கொண்ட‌ ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் நான்காவது பாசுரம் ஆகும்.

மழையானது எப்படி பொழிகிறது என்பதை எடுத்துரைக்கும் பாடல் இது. மழை பெய்யும் நிகழ்வுகளை இறைவனோடு ஒப்பிட்டுக் கூறும் ஒப்பற்ற பாசுரம்.

1200 ஆண்டுகளுக்கு முந்திய, இந்த ஆன்மிகப் பாடலில் இருக்கும் அறிவியலையும் நாம் வியக்கலாம்.

Continue reading “ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்”

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்ற பாடல் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் ஆகும்.

நாட்டு மக்கள் நீங்காத செல்வம் பெற்று வளமாக வாழ வாழ்த்துக் கூறும் பாடல் இது.

நீங்காத செல்வத்தை நிறைவாகப் பெற‌ இப்பாடல் மங்கல‌ நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.

Continue reading “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி”

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

‘வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்’ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இரண்டாவது பாடலாகும்.

இப்பாடல் பாவை நோன்பின் போது எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும், பாவை நோன்பில் எவ்வாறு ஈடுபட வேண்டும் ஆகியவற்றை விளக்குகிறது.  Continue reading “வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்”