ஒரு கோப்பை
தேநீருடன்
மஞ்சள் பூவையும்
பூக்கள் குலுங்கும்
நந்தவனத்தையும்
இருவரும்
பரிமாறிக் கொண்டோம்!
ஆழ்மனப் பறவை! – எஸ்.மகேஷ்
அங்கும் இங்கும்
பறந்து
எங்கும் தங்காமல்
அலைபாயும்!
தொலைந்த பொழுதுகள்! – எஸ்.மகேஷ்
அன்றைய
அந்தியின் வனப்பிற்கு
வெண்பற்களின்
சிரிப்பு
காணிக்கையானது!
பொய் முகம்! – எஸ்.மகேஷ்
நீள் முகமாய்
உருண்டையாய் சில நேரம்
நிறங்கள் தெரியும்
மாறி மாறி!
வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்
மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!