எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது

எழுத்தாளர் பாரதிசந்திரன்

எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய ‘படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்‘ எனும் நூல், பொதிகை மின்னல் கலைக்கூடம் வழங்கும் சிறந்த கட்டுரை நூல் விருது பெற்றது.

விருது பெற்ற எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.

Continue reading “எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது”

வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி

வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி அளவிட முடியாதது. ஆனால் அவற்றின் வரலாறு இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய பழைய வரலாற்று ஆசிரியர்கள் முதல் இன்று எழுதும் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வரை தாம் எழுதிய வரலாற்றில், முன்னோர் எழுதிய துறைகளை மட்டுமே தாமும் எழுதி விட்டுச் சென்று விடுகின்றனர்.

Continue reading “வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி”

தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்

தொன்மை அல்ல; தொடர்ச்சியே தமிழின் பெருமை என்பதை நாம் அறிவோம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக இருப்பதை விட, இன்றும் உயிர்ப்போடு இருப்பதே தமிழின் பெருமை.

தமிழின் இலக்கியம் தன்னிகரற்றது.

அறம் சார்ந்ததாக வாழ்க்கை அமைய வேண்டும் என்று நம் முன்னோர்கள் இலக்கியம் படைத்தார்கள்.

நம்மைப் பற்றிப் பிறர் அறியக் கூடிய புற வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும், நம்மைப் பற்றி நாம் மட்டுமே அறியும் அக வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் வாழ்க்கை இலக்கணம் சொல்லிச் சென்றார்கள்.

Continue reading “தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்”

தந்தையும் மகளும் குறும்படம் விமர்சனம்

பிரிவுத் துயரின் வலி மற்றும் குழந்தையின் பாசம் எத்தகையது என்பதை மனதின் அடிஆழம் வரை சென்று உணர்த்தும் இயங்குபடம் (ANIMATION) தந்தையும் மகளும் குறும்படம்.

ஒரு பெண் குழந்தை, தன் தகப்பனார் மேல் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துவாள்.

இன்னொரு தாயாக, இன்னொரு தங்கையாக, இவ்வாறாக அவள் காட்டும் பாசம் இந்த உலகில் வேறு எங்கும் இல்லாதது.

அதன் விசுவரூப தரிசனம் எங்கும் கிடைக்காது. பெண் குழந்தைகளின் அந்தப் பாசவலையில் எந்தத் தகப்பனாரும் சிக்காமல் இருந்ததில்லை.

Continue reading “தந்தையும் மகளும் குறும்படம் விமர்சனம்”

காசிம் குறும்படம் விமர்சனம்

காசிம்

நண்பனின் உண்மைத்தன்மை எப்படிப்பட்டது என விளக்குகின்ற, நட்பின் இலக்கணம் கூறும் மிக அற்புதமான படம் காசிம் குறும்படம் ஆகும்.

சினிமா வாய்ப்புத்தேடி சென்னை செல்லும் ஒரு சராசரி இளைஞர் தான் நாகராஜ்.

அவர் தங்குவதற்கும் உணவுக்கும் கஷ்டமில்லாமல் இருக்க‌, ஒரு உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா வாய்ப்பைத் தேடுகிறார்.

அந்த உணவகத்தில் பாத்திரங்கள் கழுவுவதற்கும், காய்கறிகள் வெட்டுவதற்கும் கல்கத்தாவிலிருந்து வந்த காசிம், அவரிடம் நட்பாய் பழகுகிறான்.

Continue reading “காசிம் குறும்படம் விமர்சனம்”