தமிழ்நாடு பற்றி அறிவோம் என்பது இனிது இதழில் தமிழ்நாடு பற்றி வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.
Continue reading “தமிழ்நாடு பற்றி அறிவோம்”இயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து
வலி நிவாரணி என்றால் வலியை நீக்குவது அல்லது குறைப்பது என்று பொருள்.
நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு, அவற்றைப் போக்கிக் கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
நம் உடலில் தோன்றும் வலிகளுக்கு இயற்கையே சில பொருட்களை வலி நிவாரணப் பொருட்களாக அளித்துள்ளது. அவையே இயற்கை வலி நிவாரணிகள்.
Continue reading “இயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து”அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை
என்னுடைய மாமனாரின் முதல் நினைவு நாளுக்காக, மனைவி, குழந்தைகள் என குடும்பம் சகிதமாக விருதுநகரில் இருந்த மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.
என்னுடைய சொந்த ஊரும் விருதுநகர் தான். நான் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பினை முடித்ததும் இந்த ஊரில்தான்.
கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றவன், அங்கேயே வேலையும் கிடைக்க, அப்பாவின் டிரேடிங்கையும் சென்னைக்கு மாற்றச் சொல்லி அம்மா, அப்பா மற்றும் பாட்டியுடன் சென்னையிலேயே செட்டிலாகி விட்டேன்.
Continue reading “அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை”தட்டான் – பூச்சிகளின் தேவதை
தட்டான் பூச்சிகளின் தேவதை என்று சூழியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓர் இடத்தில் தட்டான் பூச்சியைப் பார்த்தால், அவ்விடத்தில் சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நாம் வாழும் இப்பூமியில் நம்முடைய சூழல் அமைப்பு அழகானது மற்றும் அவசியமானதும் கூட.
சூழியல் என்பது ஒரு உயிரினத்தின் வாழிடத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரற்ற பொருட்களை உள்ளடக்கியது.
எந்த ஒரு உயிரினமும் சூழலியலில் உள்ள மற்றவற்றுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி.
ஆதலால் மனிதனின் செயல்பாடுகளினால் சூழலில் உள்ள ஏதேனும் ஓர் உயிரினம் எண்ணிக்கையில் குறையும் போதோ, முற்றிலும் அழிய நேரும் போதோ, அது சூழியலுக்கும் அதில் உள்ள ஏனைய உயிரினங்களுக்கும் சரி செய்ய முடியாத பாதிப்பினை விளைவிக்கிறது.
Continue reading “தட்டான் – பூச்சிகளின் தேவதை”முதலை – ஊர்வன அரசன்
முதலை என்றதும் அதனுடைய விரிந்த வாயும் கோரமான பற்களுமே ஞாபகத்திற்கு வரும். ஊர்வன வகையைச் சார்ந்த இவ்விலங்கு அபார தாக்கும் திறனும் வலிமையான கடிக்கும் திறனும் கொண்டுள்ளதால் ஊர்வன அரசன் என்று அழைக்கப்படுகிறது.
முதலையினம் சுமார் 24 கோடி ஆண்டுகளாக இப்பூமியில் வசித்து வருகின்றது. அதாவது டைனோசர்கள் வாழ்ந்த மெசோசோயிக் சகாப்தத்திலிருந்து முதலைகள் இப்புவியில் வாழ்ந்து வருகின்றன.
Continue reading “முதலை – ஊர்வன அரசன்”