ஆஹோ… அய்யாஹோ…

அக்னிச்சட்டி

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா!

கடந்த 21 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த இந்த மந்திர உட்சாடனை, இன்று அதிக பட்சமாகி விருதுநகர் விண்ணை வியாபித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வேளையில் அம்மனைப் பற்றி எனது ஒரு சிறு பாடல்.

Continue reading “ஆஹோ… அய்யாஹோ…”

நம்மை காக்கும் பகவதி! – தா.வ.சாரதி

நம்மை காக்கும் அன்னையவள் பகவதியே
நன்மை தந்து காத்திடுவாள் அருள்நிதியே

நாடிவரும் பக்தருக்கு தரும் வரமே
கோடிவரம் வாழ்முழுதும் அவள் வரவே

Continue reading “நம்மை காக்கும் பகவதி! – தா.வ.சாரதி”

பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை.

ஹாலில் சுற்றும் சீலிங் ஃபேனின் சன்னமான ஒலியைத் தவிர‌ வேறு எந்த சப்தமுமின்றி வீடு ‘கல்’லென்று அமைதியாய் இருந்தது. ஆனால் ஆனந்தியின் மனதில் அமைதி இல்லை. அது பௌர்ணமி நாளின் கடலலைப் போல் பொங்குவதும் வடிவதுமாய் எண்ண அலைகளால் அலைக்கழிக்கபட்டு அமைதியின்றி தவித்தது.

செகன்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் ஆறுவயது மகன் அன்பரசு பள்ளிக்கும், அரசுப் பணியிலிருக்கும் கணவன் சுதாகர் அலுவலகமும் சென்றாகி விட்டது.

Continue reading “பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”