அப்பத்தா – சிறுகதை

அப்பத்தா

“அப்பத்தா, பரண்ல இருக்கிற உழக்க காணல” என்று கத்தினாள் மஞ்சு.

“நல்லா பாருத்தா, அங்கதான வைச்சேன். ஒருவேள உங்க ஐயன் காச எடுத்திட்டு உழக்க எங்கேயும் போட்டுட்டானோ? சரி, மரப்பீரோலு மேத்தட்டுல சேலைக்கு அடியில சின்ன பையில காசு வைச்சிருக்கேன். அத எடுத்து கொய்யாப் பழம் வாங்கு” என்றாள் செல்லம்மா.

“சரி, அப்பத்தா”

“இப்படிதான் என்னப் பாடாப் படுத்துறான். நாத்து நட்டு, கள பிடுங்கின்னு குறுக்கு ஒடிய காட்டு வேலைக்கு போயி, மாட்டுல பால் கறந்து வித்துன்னு, நாலு காசு பார்க்குறதுக்கு என்ன கஷ்டப்படுறேன். இந்த மனுசன் அதப் புரிஞ்சுக்காம, உழக்குல இருந்த காச எடுத்திட்டு, உழக்கையுமுல்ல காணாமப் போட்டுட்டான் பாரு தங்கம்” என்று மஞ்சுவின் அம்மாவிடம் புலம்பினாள் செல்லம்மா.

Continue reading “அப்பத்தா – சிறுகதை”

உதகை பயணம் – இனிய நினைவுகள்

உதகை பயணம்

உதகை பயணம் இனிய நினைவுகள் பலவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியது.

இளங்காலை வேளை.

கோவையிலிருந்து அரசுப் பேருந்தில் பயணித்து இறங்கிய இடம் சேரிங்கிராஸ்.

ஆதவனின் இளங்கதிர்கள் மேனியில் விழுந்தும், குளிர்மை நிறைந்த காற்றில் அதன் வெப்ப கீற்று என் உடலுக்கு சிறிதும் உறைக்கவில்லை.

Continue reading “உதகை பயணம் – இனிய நினைவுகள்”

பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை

மனிதத்தை உயர்த்துங்கள்

பழ. தமிழன் சின்னா அவர்களின் இந்தக் கவிதையைப் படித்ததும் சில்லென்று ஒரு புத்துணர்வு உங்களைப் பற்றிக் கொள்ளும்.

 

சோர்ந்து போகாதீர்கள்

பறவைகளைப் பாருங்கள்!

 

பயம் கொள்ளாதீர்கள்

உறவுகளை நினையுங்கள்! Continue reading “பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை”