பல பல வழி உண்டு
அதனில் தேர்ந்தெடுத்து
ஆற்றலை உட்புகுத்து
உழைப்பினை மேம்படுத்து!
வெற்றி நடைபோடு உழைப்பாலே!
உழைப்பினாலே உயர்ந்தவரை உள்ளபடி
அழைத்து நாம் வணங்க வேண்டும் நல்லபடி
பிழைக்க இருக்கும் அனைத்து வழியும் கண்டுபிடி
பிழைப்பிற்காக பிழை செய்யாதே கண்டபடி
என்ன புண்ணியம் செய்தேனோ?
என்ன புண்ணியம் செய்தேனோ?
அம்பலத்தய்யனை – தில்லை
அம்பலத்தய்யனைக் கண் குளிரக் காண
என்ன புண்ணியம் செய்தேனோ?
தாமல் விரைந்திடுக!
மின்னும் சதங்கை பளீர் பளீர் என
தஞ்சம் கொள்வீர் நெஞ்சம் பட படவென
இன்முறுவல் திருமுகமதனில் சடக்கென விழ
இன்பமுறவே நம் வினை தளை அவிழ!
நாங்கள் உய்வோம்!
சொற்களே மலர்களாக தூவித்
தொழுது வணங்கி நின்னைத்
தொடருவேன் நாச்சியாரே,
கருணை பொங்கி அருளுவீரே!