பரதேசம் – சிறுகதை

பரதேசம்
பரதேசம் போவதுதான் ஒரே வழியென்றால் செய்து விட வேண்டியதுதான். ஒரு சில நாட்களாக அதே சிந்தனை. 

மாடுகள், உழவு நிலம், கிணறு, மனைவி, மகன், கண்ணுக்குட்டி, அந்த ஒற்றை பனை மரம், 12-ம் நம்பர் பஸ், கருப்பன் நாய், பால்காரம்மா, அய்யனார் எல்லாமே அவ்வபோது நினைவுக்கு வந்தது.

முக்கியமாக மகன், பதினெட்டு வயது. அவன்தான் சொன்னான்.

“எங்கேயாவது போயிரு..”

“சம்பத்து, உம் பேச்சே சரியில்லை.. “

Continue reading “பரதேசம் – சிறுகதை”

பூங்கொடிக்கு பொன்கவிதை

கருவறையில் சுமந்தவளே
எனைக் காப்பாற்றும் உமையவளே
உடம்புக்குள் என்னை வைத்து
உயிரோடு சேர்த்தணைத்து

உதிரத்தை பாலாக்கி
எனை உலகறிய தந்தவளே
தூக்கத்தை நீ தொலைத்து
துணிவுடனே இருந்திங்கே
எனைத் தோரணையாய் வளர்த்தவளே

Continue reading “பூங்கொடிக்கு பொன்கவிதை”

வாழ விடுங்கள் – சிறுகதை

வாழ விடுங்கள்

திருமாறன் இரண்டு நாட்கள் லீவில் திருச்சி வந்திருந்தான். தர்மபுரியில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணி புரிபவன். சொந்த ஊரும், மனைவியின் ஊரும் திருச்சியே.

திருமாறனின் பெற்றோர் ஸ்ரீரங்கத்திலும், அவன் மனைவியின் பெற்றோர் திருவெறும்பூரிலும் வசித்து வந்தனர். மனைவி பிறந்த வீடு வந்து பத்து நாட்களாகிறது. மனைவியைக் கூட்டிப் போவதற்காக வந்திருக்கிறான்.

Continue reading “வாழ விடுங்கள் – சிறுகதை”

பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்

விஜயேந்திரனின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு

பெற்றோர்

தலைமகன் துபாயில்

இரண்டாம் மகன் இத்தாலியில்

கடைக்குட்டி கத்தாரில்

இவர்களின் பெற்றோரோ

முதியோர் இல்லத்தில்

Continue reading “பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்”