மழை பொழிஞ்சு ஓய்ந்த பின்னே
தவளை நாங்க பாடுவதை
குழந்தைகளும் கேட்டு மகிழ்ந்த
காலம் எங்கே?
தேடுங்க …
சேறும் சகதியுமா நிறைந்திருந்த கண்மாயின்
கரை சுருங்கி போனதெங்கே?
தேடுங்க …
ஊர்கழிவு நீரால இறந்து போன ஏரிகளை
ஊரோரம் காணவில்லை!
ஓடி வந்து தேடுங்க …
நீர்பிடிப்பு பகுதிகளில் நெடுந்தூரம் தொலைஞ்சுருச்சு
நீர் வரும் கால்வாயும் ஓடையாகி சுருங்கிருச்சு!
நீங்களுமே தேடுங்க …
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!