ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?
கலசங்கள் தானியங் (விதை)களின்
பாதுகாப்பு பெட்டகங்கள்!
விதைகளின் முளைப்புத்திறன் (12ஆண்டுகள்)
முடியும் முன்பே புதுப்பிக்கப்பட வேண்டும்
அதுதான் குடமுழுக்கு!
கலசங்கள் ஐம்பொன்னால் ஆக்கப்பட்டவை
இடி மின்னல் கதிர்வீச்சைத் தாங்கும்
ஆகர்ஷண தேவதைகள் என்பதனால் தான்
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என
மூத்தவர்கள் வாக்கு முழங்கியதோ?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942