எங்கே போயின மரவட்டைகள்? ஹைக்கூ நூலாய்வு

எங்கே போயின மரவட்டைகள் என்ற ஹைக்கூ கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.

தமிழ்ராசா எனும் வந்தவாசிக் கவிஞர் அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர். இலக்கிய நிகழ்வுகளில் அவற்றை வாசிப்பவர்.

அத்தகையவர் நீண்ட காலமாக தமது கவிதைகளை நூலாகக் கொண்டு வராமல் அண்மையில்தான் முடிவெடுத்து நூலாகக் கொண்டு வந்துள்ளார்.

அதுவே ‘எங்கே போயின மரவட்டைகள்’ என்னும் நூலாகும். அந்நூலை எழுதத் தூண்டியவர் சிறந்த ஆசிரியையும் எழுத்தாளருமான அவரது மகள் ரஷீனா.

மகள் கொடுத்த உற்சாகம் இல்லையெனில் இந்நூல் வெளி வந்திருக்காது. ‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்’ என்று சும்மாவா சொன்னார்கள்?

எனும் முதல் ஹைக்கூவிலேயே கவிஞர் யாருக்காக எழுதுகிறார் என்பதை அறிய முடிகிறது. இன்னமும் விவசாயி அரை நிர்வாணமாகத்தான் இருக்கிறார் என்பதன் உட்பொருளாய் அவரது வறுமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

இயற்கையை அனைவரும்தான் பார்க்கின்றனர். ஆனால் அனைவருக்கும் கற்பனை சிறகடித்துப் மறப்பதில்லை.

அப்படிப் பறந்தாலும் அது எழுத்து வடிவில், அதுவும் கவிதை வடிவில், இன்னும் சொல்லப்போனால் வாமன வடிவில் ஹைக்கூவாக மலர்வதில்லை.

ஆனால் கவிஞர் தமிழ் ராசாவுக்கு இது எளிதாகிறது‌. அதற்கு அவரது தொடர் வாசிப்பும் முக்கியக் காரணமாகும்.

நீரில் நிலா கண்டு எழுதாத கவிஞர்களே இல்லையெனலாம். இவரது கற்பனையைப் பாருங்கள்

தெருவிளக்கின் கீழ் அமர்ந்து படிக்கும் மாணவர்களை மேதைகள் ஆக்கி தெருவிளக்குகள் மரியாதை செய்யும் விதமாக

என்கிறார் தமிழ்ராசா.

மின்னல் கத்தி
கிழித்தது மேகத்தை
வான்மழையாக

என இயல்பாய் பொழியும் மழையை வைத்து தனது கற்பனை குதிரையைத் தட்டி விட்டுத் தரமான துளிப்பாக்களைப் படைத்துள்ளார் கவிஞர்.

என்றெழுதிய கவிஞர் மூன்றாவது வரியை என்னவாக எழுதியிருப்பார் என எப்படி மூளையைக் கசக்கினாலும் சிக்கவில்லை.

‘தார்ச்சாலை’ என அவர் எழுதியிருப்பதைப் படித்த பிறகுதான் “ஆமாம் இல்லை” எனும் ஆச்சரியம் எழுகிறது.

பள்ளியில் பயிலும் பிள்ளைகள் மீது கரிசனம் கொண்டு பல கவிதைகளை வடித்துள்ளார் தமிழ்ராசா.

புத்தகப்பை பிடித்த கையில்
தூக்குவாளி ஏறியது
குழந்தைத் தொழிலாளர்

சுதந்திர தினம்
மாணவன் மகிழ்ச்சி
பள்ளி விடுமுறை

பறந்து செல்கிறான்
மாணவன் பள்ளிக்கு
காலைநேர உணவு

படிநெல்லில்
‘அ’ எனக் கோலமிட்டது
விஜயதசமியன்று குழந்தை

ஆகிய கவிதைகளை சிலாகிக்கும் வேளையில்

எனும் துளிப்பா நெருடுகிறது.

தொலைக்காட்சித் தொடர்களைக் கண்டு சீரழிவது பெரும்பாலும் பெண்களே என்பது கசக்கும் உண்மை. அதனால்தான்

என்கிறார் கவிஞர்.

எனும் தமிழ் ராசாவின் துளிப்பாவைப் படிக்கும்போது,

என்னும் சுந்தர செல்வனின் துளிப்பா நினைவுக்கு வருகிறது. கவிஞர்களின் கற்பனைகளில் வெவ்வேறு கவிதைகள் பூக்கின்றன.

எனும் கவிதையில் பக்தர்களின் கோரிக்கைகள் படுத்துக் கிடக்கும் யதார்த்தத்தைத் தமது கவித் திறத்தால் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர் தமிழ் ராசா.

எனும் துளிப்பாவில் இறந்த நாளையும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

கிராமப் புற நூலகங்களில் நூல்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் அவலத்தை அக்கறையோடு இப்படிப் பதிவு செய்துள்ளார் கவிஞர்.

கீழ்க்கண்ட கவிதையில் முதல் வரியை மூன்றாம் வரியாக்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

சுதந்திரப் பவளவிழாவையும் கொண்டாடியாகிவிட்டது இந்தியா. ஆனாலும் சுடுகாட்டுப் பாதையில்லா கிராமங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை,

எனும் துளிப்பாவால் சாடுகிறார் தமிழ் ராசா.

இந்நூலை அகநி வெளியீட்டின் மூலம் அழகிய முறையில் அச்சிட்டு, அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் மு.முருகேஷ் கூறியுள்ளதைப் போல, தமது முதல் நூலிலேயே தமிழில் பேசப்படும் வகையிலான பல ஹைக்கூ கவிதைகளை எழுதியுள்ள கவிஞர் தமிழ் ராசாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்நூலை வாங்கிப் படிப்பதும் வீட்டு நூலக அலமாரியில் சேர்ப்பதும் அவசியம்.

நூல்: எங்கே போயின மரவட்டைகள்?

எழுத்தர்: தமிழ் ராசா

பக்கம்: 80

விலை: ₹100

வெளியீடு: அகநி வெளியீடு
3 பாடசாலை வீதி
அம்மையப்பட்டு
வந்தவாசி 604 408
திருவண்ணாமலை மாவட்டம்

கைபேசி: 9444360421

பெரணமல்லூர் சேகரன்
8 ஏ வேளாளர் தெரு
பெரணமல்லூர் – 604503
திருவண்ணாமலை மாவட்டம்
கைபேசி: 9442145256

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.