நீ நீயாக இரு – கவிதை

இது உன் காடு
எந்த மரக்கிளையில் வேண்டுமானாலும்
கூடு அமைக்கலாம் நீ …

எல்லா திசைகளுமே
உன் றெக்கையை நேசிக்கின்றன…

எந்த ஒரு பூவும் நீ
குடிக்கும் தேனுக்குத்
தடை போடுவதாக இல்லை …

ஓடும் நதியாவிலும்
தாகம் தீர்த்துக் கொள்ளும்
உரிமை இருக்கிறது உனக்கு…

மனிதக் காற்றை
சுவாசிக்காத வரையில்
உனதானது உனதாகவே இருக்கும்
நீ நீயாகவே இருப்பாய் ..!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.