அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி

அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி

“இப்பயெல்லாம் புள்ளைங்களுக்கு காது குத்துறப்போ வலிக்கக் கூடாதுங்கிறதுக்காக டாக்டருக்கிட்டேயும், அழகு நிலையத்துலேயும் போய் காது குத்துறாக. நீங்க காது குத்தி கம்மல் போட்டதக் கேட்கும்போது ரொம்ப சிலிர்க்குது.” என்றாள் தனம்.

Continue reading “அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி”

ஆனந்த சுதந்திரம் – சிறுகதை

ஆனந்த சுதந்திரம் - சிறுகதை

முரளியின் அறையை அடைந்தபோது கடிகாரத்தைப் பார்த்தான் மனோகர்.

மாலை 6.30 மணி.

அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.

‘முரளி இருக்கிறானா, இல்லையா?’ சந்தேகத்துடன் மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து பார்த்தபோது அறை முழுக்கப் புகை மண்டலம்! சிகரெட் நாற்றம்.

முரளி அலங்கோலமாய்க் கட்டிலில் கிடந்தான். அருகே ஸ்டூலில் காலி விஸ்கி பாட்டில் – கண்ணாடி டம்ளர்கள் – சோடா பாட்டில்.

Continue reading “ஆனந்த சுதந்திரம் – சிறுகதை”

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.

இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.

‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.

Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை

அந்த தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன் ஸ்டூலில் காக்கிச் சீருடையில் அமர்ந்திருந்த சாரங்கன் ஒருவித சலிப்புடன் கொட்டாவி விட்டவாறே சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான்.

அதிகாலை நான்கு மணி.

Continue reading “நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை”

கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

“பெரிய கோவில் தெப்பத்தில் கரண்டைக்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதை வேடிக்கைப பார்த்து விட்டு கோவிலுக்கு உள்ளே போனோம். அங்கே மூலவர் கோவிலுக்கும் ஆத்தா கோவிலுக்கும் திரை போட்டு மூடியிருந்தாங்க.

அதனால நாங்க வெளிப் பிரகாரத்தில நின்னு சாமிய கும்பிட்டிட்டு வெளி பிரகாரத்திலேயே நடந்து வந்தோம். அந்த கோயில்ல அப்ப மொத்தம் மூணு மாங்கா மரம் இருந்துச்சு.

Continue reading “கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”